
காமுகர்களின் அடாவடித்தனம், 18 வயது இளம் பெண் தூக்கிட்டுத் தற்கொலை.
(மலரவன்) எருவில் கிராமத்தை சேர்ந்த அருளானந்தம் ஷாலினி வயது 18 நிரம்பிய இளம் பெண் 10.10.2018 இரவு 10.30 மணியளவில் தனது வீட்டினுள் தொங்கி மரணமடைந்த நிலையில் உறவினர்கள் கண்டுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 11.10.2018 அதாவது இன்று 08.30 மணிவரை சடலம் வீட்டினுள் தொங்கிய நிலையில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. பிரேத பரிசோதனைக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை உடலம் கொண்டு செல்லப்படவுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
பெண்களுக்கு ஆசை வார்தைகள் கூறி ஏமாற்றுகின்ற சிலகாமுகர்களின் அடாவடித்தனம் இம்மரணத்தின் காரணமென மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.