WorldPlus WorldPlus
  • முகப்பு
  • செய்திகள்
  • சிறப்புக் கட்டுரை
  • புலனாய்வுச் செய்திகள்
  • காணொளிகள்
  • தொடர்பு
  • மேலும்
    • பல்சுவைகள்
    • திருகோணமலை
    • அம்பாறை்
    • சிறப்புசெய்திகள்
    • வேலை வாய்ப்புகள்
Go to...
Share :

தீர்ப்பை எழுதிவிட்டு வாதிட முனையும் காங்கிரஸ்

தயாளன்

"தமிழருக்கு எப்போதுமே பிரச்சினையாக இருப்பது காத்தும் ராசியு ம் தான்“ இவ்வாறு ஈழத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவராக விளங்கிய கே . டானியல்சுட்டிக்காட்டியதாக   மூத்த ஊடகவியலாளர் ஒருவர் குறிப்பிட்டார்.  திரு .டானியல் குறிப்பிட்ட காத்து என்பது அப்புக்காத்து (இதற்குள் அப்போதைய ராணி அப்புக்காத்துகளும் தற்போதைய ஜனாதிபதி அப்புக்காத்துகளும் அடங்குவர்) ராசி எனக் குறிப்பிடப்பட்டது புரக்கிராசி.      
 தமிழர்களை ஒரே இனமாகப் பார்க்காமல் இலங்கைத் தமிழர் இந்தியத்தமிழர் என வகைப்படுத்தினார் அப்போதையஇலங்கையின் பதிவாளர் நாயகமாக விளங்கிய   சேர் .பொன்னம்பலம் அருணாசலம் .  பிறப்புச் சான்றிதழில் சாதி என்று குறிப்பிட்டதும் ஒரு மோசமான மனோநிலையாகும்.
சிங்களவரில் எவரையும் வேற்றுநாட்டுக்காரர் என அவர் வகைப்படுத்தவில்லை . இதனால் சிங்களவர் தாம் ஒரே இனம் என்ற ஐக்கிய உணர்வுடன் வாழத்தலைப்பட்டனர்.  சிங்களவர் என்று குறிப்பிட்டதால் தமிழர்களுக்கு சாதகமான எந்த விடயங் களையும் எதிர்ப்பதென  ஐ.தே. க, சுக, ஜே .வி. பி   போன்றவை ஒத்த கருத்துடன் உள்ளன. 
இதற்கு வடகிழக்கு பிரிப்பு, யுத்தம் தொடர்பான நிலைப்பாடு, சர்வதேச நீதிமன்றில் யுத்தக் குற்றவாளிகளை நிறுத்துதல் போன்றவிடயங்களில் தூய சிங்கள இரத்தம் என்ற உணர்வுடன் அவர்கள் செயற்பட்டதை சுட்டிக்காட்டலாம் . 
தமிழர்களை நாடுவாரியாக   வகைப்படுத்தியதால் தான் மலையகத் தமிழர்களின் குடியுரிமையை, வாக்குரிமையை பறித்த போதுஅமைச்சராக இருந்த ஜீ. ஜீ .பொன்னம்பலம்  அதனை எதிர்த்து வாக்களிக்கவில்லை. 
அப்படி எதிர்த்து வாக்களிக்காததற்கு அமைச்சர் பதவியை இழக்க நேரிட்டிருக்கும்;  அந்தப் பதவியால் தானே அவர் பல தொழிற்சாலைகளை நிறுவினார் எனச்  சப்பைகட்டு கட்டுகின்றனர் சிலர் . இந்த  லட்சணத்தில் "தமிழன் என்று சொல்லடா; தலை நிமிர்ந்து நில்லடா" என்ற கோஷம் வேறு. எனினும் "இன்னாசெய்தாரே  ஒறுத்தல் அவர்  நாண நன்னயம்  செய்துவிடல்" என்ற குறள் மொழிற்கேற்பவே மலையகத் தமிழரின் வரலாறு  அமைந்துள்ளது. எதிர்க்கட்சித்  தலைவராக இருந்த   அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மீதானநம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டபோது அதனை எதிர்த்து வாக்களிக்கும் திராணி அமைச்சர் தொண்டைமானுக்கு இருந்தது. அதுமட்டுமல்ல இன்னுமொரு உதாரணத்தையும் குறிப்பிடலாம் . இந்தியப் படையினருடனான யுத்தம் தொடங்கிய சிலநாள்களின் பின் தமது பூர்வீ க இடமான பட்டமங்கலத்துக்கு சென்றார் தொண்டமான். அங்கே   தினத்தந்தி நாளிதழின் நிருபர் இவரைப்பேட்டி கண்டார். "இந்தியப்படையினருடன் பிரபாகரன் யுத்தம் புரிகிறாரே?" எனக் கேட்டார் அந்த நிருபர். அதற்கு "இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை பகத்சிங்கைப் போன்றவர் பிரபாகரன் "எனப் பதிலளித்தார் அமைச்சர். இந்தியாவில் நின்றுகொண்டே இப்படிச்சொல்லும் தைரியம் அவருக்கு இருந்தது . இதற்கு  முன்னதாக "இந்தியப்படையினர்மக்களைச் சுடுவதாக தகவல் வெளியாகிறதே இது உண்மையா?" என அமிர்தலிங்கத்திடம் கேட்டார்  ஒரு ஊடகவியலாளர். அதற்கு "அவர்கள் இறப்பர் தோட்டாக்களினால் தான் சுடுகின்றனர்."எனப் பதிலளித்தார் அமிர்தலிங்கம். தொண்டமான் ஒரு அப்புக்காத்து அல்லர். அதனால் அவர் உண்மையைக் கூறினார். அமிர்தலிங்கம் ஒரு அப்புக்காத்து .           

அமீர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை   ஆளுங்கட்சியில் இருந்துகொண்டே எதிர்த்து வாக்களித்த இன்னுமொருவர் பிரதி நீதி அமைச்சர் ஷெல்டன்  ரணராஜா.  மனசாட்சிப்படியே எதிர்த்து வாக்களித்தேன் என்று கூறினார்அவர்.
 மனசாட்சியை விற்றால் தான் அமைச்சர் பதவியில் தொடரலாம் என்று காட்டியவர்தான் கஜேந்திரகுமாரின் தாத்தா ஜீ .ஜீ. பொன்னம்பலம். 
  குமார் பொன்னம்பலம் காலம் நீங்கலாக உணர்வுபூர்வமாக எதையும் அணுகமுடியாததாக   அன்றிலிருந்து இன்று வரை அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸின் வரலாறு தொடர்கிறது. 
***
சங்கரில் தொடங்கிய தமிழீழ விடுதலைப்புலிகள் மாவீரர் பட்டியலில் விமானத்தாக்குதலில் வீரச் சாவடைந்த முதல் மாவீரராக நாவலப்பிட்டியைச்  (மலையகம் )சேர்ந்த லூக்காஸ் என்பவரின் பெயரே குறிப்பிடப்பட்டுள்ளது.குறிப்பிடத்தக்களவில் போராளிகளாகவும் தளபதிகளாகவும் . விளங்கியுள்ளனர் மலையகத்தவர். 
மட்டக்களப்பு நகர அரசியல் பொறுப்பாளராக ஒருவர் விளங்கினார் .  
மலையகத்தில் பலபோராளிகளை தங்க வைத்து காப்பாற்றியுள்ளனர்.இக் குற்றச்சாட்டிலேயே மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சந்திரசேகரன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார். இவர் சிறையிலிருக்கும் போதே பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இறுதி யுத்தத்தின் பின் பல மலையகப் போராளிகளும் ஆதரவாளர்களும் பூஷா வரை கொண்டு செல்லப்பட்டனர். 
வடகிழக்கில் சுனாமியால் பாதிக்கபட்ட மக்களுக்கு மலையகத்தமிழர்கள் தம்மிடையே சேகரிக்கப்பட்ட பொருட்கள் ,உணவுகள். உடைகளைக் கொண்டுவந்து வழங்கினர். அவர்களது நாளாந்த வருமானத்தை பொறுத்தவரை அந்த அன்பளிப்புக்கள் மிகப்பெறுமதியானவை. இதில் உணர்வுகளே கவனிக்கப்படவேண்டியது.
அரசியல் கைதிகள் தொடர்பான விடயங்களை முன்னெடுத்து வரும் அருட் தந்தை சி. சத்திவேலும் மலையகத்தவரே. முள்ளிவாய்க்கால் தொடர்பானவிடயங்களை வடகிழக்குக்கு வெளியே கொண்டுசென்றதில் காத்திரமான பங்களிப்பை இவர் வழங்கியுள்ளார்.
எனினும் மலையக மக்களின் ஆயிரம் ரூபா சம்பளக் கோரிக்கைக்கு எமது அரசியல் கட்சிகள் எவையும் போதுமானளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது கவலைக்குரியது.        
ஆயுதப்போராட்டம் முனைப்பு பெற்றிருந்த போது திம்புவில் முன்வைக்கப்பட்ட  கோரிக்கைகளுள் மலையகத்தவர்கள் சம்பந்தமான  விடயமும் உள்ளடக்கப்பட்டிருந்தது. புலிகள்,டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் , ஈரோஸ் ஆகிய நான்கு இயக்கங்களும் இணைந்தே இக் கோரிக்கையை முன் வைத்தன. இந்த இயக்கங்களுள் முடிவெடுக்கும் தரப்பாக போராளிகள் விளங்கினர்  (சத்தியேந்திரா, சந்திரஹாசன் போன்றோர் அடங்கியிருந்தாலும்))   
  அண்மையில்   யாழ் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழக மாணவர்கள் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழரின் நிலைப்பாட்டை வேட்பாளர்களிடம் ஒருமித்து  வெளிப்படுத்த வேண்டும் என தமிழ் கட்சிகளிடம் கோரினர்.  
பொது வேட்பாளரென  ஆரம்பித்த விடயம் இறுதியில்  இந்த வடிவம் எடுத்தது. 
இவ்வாறான முடிவு எடுக்க முன்னரே அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சி இத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்து விட்டது. யோகர் சுவாமிகளின் வார்த்தையில் கூறுவதானால் "இது எப்போதோ முடிந்த காரியம்" யூரோ, ஸ்டேலின்  பவுன்ஸ் , டொலர்  சுவிஸ் பிராங்  எனப் பல்வேறு நாணயங்களுடன் புழங்கும் வளவாளர்கள் ,புலமையாளர்கள் ............ எனத்   தம்மைத் தாமே அறிவித்துக் கொள்ளும் பலர்  யாருடைய தேவைக்காகவோ இத் தேர்தலை புறக்கணிக்கவேண்டும் என ஜீ.ஜீ யின் பேரனிடம்   தெரிவித்தனர்.(உத்தரவிட்டனர் என்றும் சிலர் கருதலாம்   ) அவர்களின்  கருத்துக்களை தமது  மொழியில் வாந்தி எடுத்தார் கஜேந்திரகுமார்.

முன்னதாக தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்தை ஆட்சேபித்தார் சிறிதரன் எம். பி. கடந்தகால உதாரணங்களையும் சுட்டிக்காட்டினார்  உடனே அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அப்புக்காத்து மணிவண்ணன் "வாக்களித்து சஜித்தை   ஜனாதிபதியாக்கப் போகிறீர்கள்" என்று கேட்டார். இதன் மூலம் தமிழர் சுயமாக வாக்களித்து விட்டால் யாருக்கு வாக்களிப்பர் என அவர் முடிவு கட்டியிருந்தார் என்றே கொள்ளலாம். பதிலுக்கு சிறிதரன் தேர்தலைப் புறக்கணித்து கோத்தபாயவை ஜனாதிபதியாக்க முயற்சிக்கிறீர்களா ?எனக் கேட்டார் பேந்தப் பேந்தப் முழித்தார் இந்த அப்புக்காத்து.

இந்த அப்புக்காத்துமார்  தீர்ப்பை எழுதிவிட் டே அங்கு வாதிட முனைந்தனர். இறுதியாக ஏனைய தமிழ்க்கடசிகளுடன் இவர்களால் உடன் பட முடியவில்லை. மலையகமக்கள் தொடர்பாக ஏதும் குறிப்பிடவில்லையென்று முரண்டு பிடித்திருந்தால் தாத்தா செய்த தவறுக்கு பேரன் பிராயச்சித்தம் செய்கிறார் என்றாவது கொள்ளலாம். கஜேந்திரகுமாரும், கஜேந்திரனும் என்ன விடயத்துக்காக முரண்டு பிடித்தார்களோ அதற்கு சம்மதிக்காவிட்டால் பதவிப் பிரமாணம் செய்துகொள்ள மாட் டோமென்று 2004 லில்   தெரிவித்திருந்தால் எம் .பி யாகி இருக்கமாட்டார்கள் . அரசியல் அமைப்பின் ஆறாவது திருத்தத்துக்கு அமைவாக பிரிவினையை எதிர்க்கிறோம் என சத்திய பிரமாணம் செய்தவர்கள் இவர்கள் இருவரும். வாகனம், கொடுப்பனவு  என கடைசிப்  பாயசம் வரை அனுபவித்து விட்டு எம் .பிக்களுக்கான ஓய்வூதியத்தை பெற்றுக்கொண்டு தாங்கள் சுத்தமான சூசைப்பிள்ளைகள் என படங் காட்ட முனைவது  தமிழரின் ஆறாவது அறிவைக்  கேள்விக்குள்ளாக்கும் விடயம்.           
 1980பது களில் ஆரம்பத்தில் இணைந்த ஒரு போராளியிடம் அவரது குடும்பப்     பின்னணி பற்றி விசாரித்தார் தலைவர் பிரபாகரன். முடிவில் " நானும் பாக்கிறேன் சுற்றிச் சுற்றித்  தமிழரசுக்கட்சி பின்னணி உள்ளவைதான் போராட்டத்துக்கு வைத்திருக்கின ஒரு காங்கிரஸ் காரனையும் இதுவரை காணவில்லை.“ என்றார். 
1983 இன்  பின்பே காங்கிரஸ் பின்னணி உள்ள ஒரு சிலர் இணைந்திருந்தனர்.    மாமனிதர் குமார் போற்றத்தக்க பங்களிப்பை வழங்கியிருந்தார். அவரின் வழியைப் பின்பற்றாது தாத்தா வழியையே பின்பற்ற முனைகிறார் கஜேந்திர குமார் .   
இந்த தேசிய விடுதலை நெருப்பை எல்லா நெருக்கடியான காலகட்டங்களிலும் அணையாமல் பாதுகாத்தவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள். 
2009 பின் சம்பந்தன் - சுமந்திரன் என்ற இருவரிடம் மட்டுமே இருந்த தமிழரின் அரசியலை பொதுஅரங்குக்கு கொண்டுவந்துள்ளார்கள். இனி குசு குசு அரசியல் கிடையாது. என்ற செய்தி இவர்கள் இருவருக்கும் உணர்த்தப்பட்டுள்ளது. வறுமையில் வாடும் அரசியல் கைதிகளின் குடும்ப நிலையையும் கட்சியின் தேர்தலில் செலவீனத்துக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டையும் ஒரே தராசில் பார்க்கும் சுமந்திரனிடமிருந்து தமிழர் அரசியலை ஆரோக்கியமான நிலைக்கு கொண்டுசெல்ல முயற்சிக்கின்றனர் மாணவர்கள் .

  







Follow us

Facebook

மரண அறிவித்தல்


ஜீவாகரன் சுலக்ஷ்ன்
பிறப்பு: 14-02-1996
இறப்பு: 25-11-2019
இடம்:
Solothurn

மாணிக்கப்போடி மகேந்திராசா
பிறப்பு: 07-05-1950
இறப்பு: 16-10-2018
இடம்:
அரசடித்தீவு

கந்தப்போடி இராசம்மா
பிறப்பு: 07-04-1934
இறப்பு: 16-10-2019
இடம்:
அரசடித்தீவு

நினைவஞ்சலிகள்

சண்முகநாதன் கஜேந்திரன்
பிறப்பு: 09-05-1985
இறப்பு: 07-12-2018
இடம்:
மட்டக்களப்பு

நேசம்மா சாமித்தம்பி
பிறப்பு: 19-02-1937
இறப்பு: 25-12-2018
இடம்:
மண்டூர்

Ads

About Us

அன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.

சிறப்புக் கட்டுரைகள்

  • இலங்கைத்தீவும் மலையகத் தமிழர்களும்
  • நினைவழியா நிகழ்வுகள்..மாவீரர் நாளும் பாடலும்
  • தமிழீழ மக்களுக்காக உயிர்த் தியாகம் புரிந்த மாவீரர்களுக்கு மக்கள் ஆற்ற வேண்டிய பணி
  • பௌத்த பேரெழுச்சியான பிரபா இல்லாத அரசியல் வெற்றிடம்!

      battinaadham news is Leading news portal for tamil likers, especially it carries a Booming articles,Investigation Research battinaadham news,batti news,Batticaloa news,langkasri,tamilwin,hirunews,jvpnws,ibctamil,bbctamil,eastern province virakesari,Amparai news,trincomalee news, News, videos, Audio's and interesting event updates all flash news Battinaatham Srilanka news, breaking news and feature stories. Read it,Share it and Post Comments
      If you are wide Share person regarding any events in the four edge of country or county, and you like to post in any news portal. We encourage your sharing and you can send to info@battinaatham.com and we will relay through Battinaatham News Portal.Make ensure while sending mail mention your Name,Country,Contact Number to assist further.

© Copyright 2017 Battinaatham