
அக்கரைப்பற்று கண்ணகி கிராமத்தில் கத்தி வெட்டு காயங்களுடன் ஒருவர் சடலமாக மீட்பு!
அக்கரைப்பற்று கண்ணகி கிராமம் கல் உடைக்கும் மலை அருகாமையில் வெட்டுக் காயங்களுடன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டது அப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
இச்சம்பவம் நேற்று (2019/11/28) இரவு இடம்பெற்றுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் கண்ணகி கிராமத்தை சேர்ந்த விநாயகமூர்த்தி தேவரூபன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




