
தமிழனாய் கராத்தேயில் பதக்கம் பெற்ற பாலுராஜ்.
நேபாளத்தின் கத்மண்டுவில் நடைபெறும் 13 வது தெற்காசிய விளையாட்டு விழா போட்டிகளின் முதல் நாளான நேற்று (02) காலை நடைபெற்ற ஆண்களுக்கான தனிநபர் கராத்தே போட்டியில் கிழக்கு மாகாணத்தின் கல்முனை சேனைக்குடிருப்பைச் சேர்ந்த சௌந்தரராஜா பாலுராஜ் வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தார்.
குறித்த கராத்தே போட்டியில் போட்டியில் நேபாளத்தைச் சேர்ந்த கஜி ஸ்ரேஸ்தா தங்கப் பதக்கத்தையும், பாகிஸ்தானைச் சேர்ந்த நியாமதுல்லாஹ் வெள்ளிப் பதக்கத்தையும் சுவீகரித்தார்.
இதன்மூலம் தெற்காசிய விளையாட்டு விழாவில் முதல் பதக்கத்தை வென்ற தமிழ் பேசுகின்ற வீரராக தடம் பதித்துள்ளார். அத்தோடு கராத்தே போட்டிப் பிரிவுகளில் இலங்கை சார்பில் சென்றுள்ள 26 வீரர்களுள் பாலுராஜ் மட்டுமே தமிழ் பேசுபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் 2017ம் ஆண்டு முதல் இலங்கை தேசிய கராத்தே அணியில் இடம்பிடித்த ஒரேயொரு தமிழ் பேசும் வீரர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

