Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நிறுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்களால் அரசுக்கு 381 கோடி நட்டம்

நிறுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்களால் அரசுக்கு 381 கோடி நட்டம்

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நன்கொடையில் கடந்த 2020ஆம் ஆண்டு மாகாண சபை நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட நீர் விநியோக வேலைத்திட்டம் உள்ளிட்ட 32 வேலைத்திட்டங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அதன் காரணமாக அந்த வேலைத்திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 381 கோடி ரூபா நிதி அரசுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் வெளியிடப் பட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் உறுதிப்படுத் தப்பட்டுள்ளது.

தேசிய கணக்காய்வு அலுவலகம் கூறுவதன்படி, முறையான நீர்விநியோக வசதி இன்மை, குறித்த இடங்களுக்கு போக்குவரத்துச் செய்ய போக்குவரத்து வழிகள் இன்மை, நிர்மாணிக்கப் பட்டுவரும் கட்டடங்கள் அனுமதிக்கப்பட்ட திட்டங்களின் பிரகாரம் அமையாமை உள்ளிட்ட காரணங்களினால் இந்த வேலைத்திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தைகளை நிர்மாணித்தல், விலங்கு கட்டுப்பாட்டு நிலையங்கள், சமுர்த்தி வேலைத்திட் டங்களுக்காக கட்டடங்களை நிர்வகிப்பதற்கான ஒரு நிலையத்தை ஆரம்பித்தல் போன்ற வேலைத்திட்டங்கள் மக்களின் கோரிக்கைகள் இன்றியே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சில வேலைத்திட்டங்கள் சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராயாமலேயே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று மாகாண சபைகளின் அனுமதியுடன் ஆரம்பிக்கப்பட்ட அதிக எண்ணிக்கையிலான நீர்த்தாங்கிகள், தரை மட்டத்தை கவனத்தில் கொள்ளாமல் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோன்று நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களில் போதுமான கொள்ளளவு இன்மையினால் 25 வரையிலான நீர் வேலைத்திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிர்மாணங்கள் தொடர்பில், இடைநிறுத்தப்பட்ட சகல வேலைத்திட்டங்களும் எவ்வித திட்டமுமின்றி மேற்கொள்ளப்பட்டுள்ளமையே இவற்றின் பொது பண்புகள் என்று அந்தக் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சம்மாந்துறையில் போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
செய்திகள்

சம்மாந்துறையில் போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

June 7, 2025
வீட்டுப்பாடம் செய்யாத காரணத்தால் மாணவியின் வாய்த்தாடையை உடைத்த ஆசிரியர்
செய்திகள்

வீட்டுப்பாடம் செய்யாத காரணத்தால் மாணவியின் வாய்த்தாடையை உடைத்த ஆசிரியர்

June 7, 2025
தமிழரசுக் கட்சி மட்டுமல்ல எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது; தேசிய மக்கள் சக்தி
அரசியல்

தமிழரசுக் கட்சி மட்டுமல்ல எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது; தேசிய மக்கள் சக்தி

June 7, 2025
கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் வேன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி
செய்திகள்

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் வேன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி

June 7, 2025
ஆறு தொன் தங்கமும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிரப்பட வேண்டும்; சபா குகதாஸ்
செய்திகள்

ஆறு தொன் தங்கமும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிரப்பட வேண்டும்; சபா குகதாஸ்

June 7, 2025
மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கடவத்தையுடன் இணைக்கும் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்
செய்திகள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கடவத்தையுடன் இணைக்கும் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்

June 7, 2025
Next Post
‘ஜெய் பீம்’ படத்துக்கு இல்லை…ஆனால் கடத்தல்காரர் ‘புஷ்பா’வுக்கு தேசிய விருது

‘ஜெய் பீம்’ படத்துக்கு இல்லை…ஆனால் கடத்தல்காரர் ‘புஷ்பா’வுக்கு தேசிய விருது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.