Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யோஷிதவின் வழக்கு விசாரணையில் வெளியான தகவல்கள்

யோஷிதவின் வழக்கு விசாரணையில் வெளியான தகவல்கள்

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவின் பல தனிப்பட்ட தகவல்கள் நேற்று (27) நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது வெளிப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இரத்மலானை சிறிமல் உயன பகுதியில் 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வாங்கியது தொடர்பான பணமோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஜனவரி 25 ஆம் திகதி பெலியத்த பகுதியில் கைது செய்யப்பட்ட பின்னர், கொழும்பு மேலதிக நீதவான் முன் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

மேலும், வழக்கு நேற்று (27) கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க முன் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்ட போது பல விடயங்கள் வெளிவந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றன.

இது தொடர்பிலான நேற்றைய(27) நீதிமன்ற அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

சந்தேக நபர் கைது செய்யப்பட்ட நேரத்தில் கைவிலங்கு போடப்படவில்லை.

ஆனால் சிறை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்ட போது கைவிலங்கு போடப்பட்டிருந்தார்.

இதன் போது மேலதிக மன்றாடியார் நாயகம் திலிப பீரிஸ் நீதிமன்றத்தில் மேலும் ஒரு அறிக்கையை சமர்ப்பித்து, சந்தேக நபருக்கு எதிரான இந்த சட்ட நடவடிக்கை தனிமைப்படுத்தப்பட்ட வழக்கு அல்ல என்றும், பணமோசடியின் கீழ் அவருக்கு எதிராக வேறு பல வழக்குகள் உள்ளன என்றும் கூறியுள்ளார்.

விசாரணை அதிகாரிகளுக்கு வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளின்படி, கேள்விக்குரிய சொத்தின் பெயரளவிலான உரிமையாளர் டெய்சி ஃபோரஸ்ட் என்ற பெண் என்றும், அவர் சந்தேக நபரின் உறவினர்(பாட்டி) என்றும் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், 2012 வரை அவருக்கு அசையா சொத்து எதுவும் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவர் 1971 ஆம் ஆண்டு ஒரு மருத்துவமனையில் 275 மாத சம்பளத்திற்கு சமையலறை பராமரிப்பாளராக பணிபுரிந்தார் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதன்படி டெய்சி ஃபோரஸ்ட் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட மற்றைய அறிக்கையின்படி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உறவினரான பாலித கமகேயின் குடும்ப உறுப்பினர் ஒருவரால் இந்த சொத்தை வாங்குவதற்காக 24 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் பாலித கமகே இந்தக் குற்றச்சாட்டை மறுத்து, சாலை மேம்பாட்டு குத்தகையை பெறுவதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அலுவலகத்தில் பணிபுரிந்த, ஒருவருக்கு 12.5 மில்லியன் ரூபாய் இலஞ்சமாக வழங்கியதாகக் விசாரணையின் போது கூறியுள்ளார்.

மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு முக்கியமான விடயமாக, பரிவர்த்தனையின் போது, ​​யோஷித ராஜபக்ச யசாரா அபேநாயக்க என்ற இளம் பெண்ணுடன் காதல் உறவில் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் சாட்சியமளித்த யாசாராவின் மாமாவான வசந்த ஜெயசூரிய, சொத்தை தாம் வாங்கத் தயாராக இருப்பதாகக் முன்னதாக கூறியுள்ளார்.

ஆனால் யாசரவும் யோஷிதவும் திருமணம் செய்து கொண்ட பிறகு, குடியேற ஒரு வீடு தேவை என்று கூறி சொத்தை தனக்கு வழங்குமாறு யோஷித ராஜபக்ச கோரியுள்ளார்.

சம்பந்தப்பட்ட சொத்தின் பத்திரத்தைப் பெற யோஷித ராஜபக்ச ஒரு பாதுகாப்பு அதிகாரி மூலம் 34 மில்லியன் ரூபாயை அனுப்பியதாக வசந்த ஜெயசூரிய மேலும் கூறியுள்ளார்.

முன்னதாக யோஷித 2007 இல் கடற்படையில் சேர்ந்துள்ளார். பின்னர் லெப்டினன்ட்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

மற்றும் 2016 இல் அவர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படும் வரை அந்தப் பதவியில் பணியாற்றினார் என்று மன்றாடியார் நாயகம் மேலும்நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.

அப்போதைய அவரது மாத சம்பளம் 73,000 ரூபாய் ஆகும், மேலும் அந்தத் தொகை ஒருபோதும் சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது தவிர, தெஹிவளை பகுதியில் டெய்சி ஃபோரஸ்ட் பெயரில் 500 இலட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்ட மற்றொரு நிலம் தொடர்பாகவும் வழக்கு இதன்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேலும் அந்த நிலம் பெறுமதி வாய்ந்த இரத்தினக் கற்களை விற்று வாங்கப்பட்டதாக மேல் நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான நீதிமன்ற விசாரணைகளின் பின்னர், யோஷிதவுக்காக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், பிணை விண்ணப்பத்தை சமர்ப்பித்தார்.

வழக்கின் முதல் சந்தேக நபரான டெய்சி ஃபாரெஸ்ட் 2016 இல் நீதிமன்றத்திற்கு வரவழைக்கப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு கோப்பு 2017 இல் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், உண்மைகளை பரிசீலித்த பின்னர், மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க தனது உத்தரவை அறிவிக்கும் போது, ​​வழக்கு ஏற்கனவே எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருவதால், சந்தேக நபரை மேலும் விசாரணைக்காக தடுத்து வைக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறியுள்ளார்.

பணமோசடி சட்டத்தின் கீழ் ஒரு வழக்கில் முதலில் செய்ய வேண்டியது கேள்விக்குரிய சொத்தை முடக்குவதுதான் என்றாலும், அது இதுவரை நடக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதன்படி, சந்தேக நபரான யோஷித ராஜபக்சவை தலா 500 இலட்சம் ரூபா பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் அவரது வெளிநாட்டு பயணத்தை தடை செய்யவும், சாட்சிகளின் தொடர்பிலும் நீதிமன்றத்தினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கு மே 16 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வரும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நுவரெலியாவில் அரச பேருந்தில் பல பெயர் பலகைகள்; பயணிகள் குழப்பம்
செய்திகள்

நுவரெலியாவில் அரச பேருந்தில் பல பெயர் பலகைகள்; பயணிகள் குழப்பம்

June 17, 2025
நாட்டில் பெற்றோல் பற்றாக்குறை இருப்பதாக பரப்பப்படுவது போலி செய்தி; எரிசக்தி அமைச்சு
செய்திகள்

நாட்டில் பெற்றோல் பற்றாக்குறை இருப்பதாக பரப்பப்படுவது போலி செய்தி; எரிசக்தி அமைச்சு

June 17, 2025
தனியார் பேருந்து சாரதிகளுக்கும் ஓய்வூதியம் வழங்க பரிசீலனை
செய்திகள்

தனியார் பேருந்து சாரதிகளுக்கும் ஓய்வூதியம் வழங்க பரிசீலனை

June 17, 2025
நாமல் ராஜ்பகஸவின் கடந்த கால ஊழல் மோசடிகளுக்கு துணை போன சாணக்கியன்; அருண் ஹேமச்சந்திரா-VIDEO
காணொளிகள்

நாமல் ராஜ்பகஸவின் கடந்த கால ஊழல் மோசடிகளுக்கு துணை போன சாணக்கியன்; அருண் ஹேமச்சந்திரா-VIDEO

June 17, 2025
மொனராகலையில் மனைவியை சுட்டுக் கொன்ற கணவர் தன்னையும் சுட்டுக் கொண்டு உயிரை மாய்ப்பு
செய்திகள்

மொனராகலையில் மனைவியை சுட்டுக் கொன்ற கணவர் தன்னையும் சுட்டுக் கொண்டு உயிரை மாய்ப்பு

June 17, 2025
ஹட்டனில் 14 மாத ஆண் குழந்தையின் உடலுடன் பொதுமக்கள் போராட்டம்
செய்திகள்

ஹட்டனில் 14 மாத ஆண் குழந்தையின் உடலுடன் பொதுமக்கள் போராட்டம்

June 17, 2025
Next Post
28 ஆண்டுகளுக்குப் பின் கூடிய ஏற்றுமதி மேம்பாட்டு அமைச்சர்கள் சபை; விதிக்கப்பட்ட வரியை மீள பெற்றுக்கொள்ளும் வசதி!

28 ஆண்டுகளுக்குப் பின் கூடிய ஏற்றுமதி மேம்பாட்டு அமைச்சர்கள் சபை; விதிக்கப்பட்ட வரியை மீள பெற்றுக்கொள்ளும் வசதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.