Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பிற்கு பெருமை சேர்த்த சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக்கழக உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு

மட்டக்களப்பிற்கு பெருமை சேர்த்த சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக்கழக உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு

3 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், விளையாட்டு

அகில இலங்கை மல்யுத்த போட்டியில் சம்பியன் கிண்ணத்தினைப்பெற்று, மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் பெரும்சேர்த்த மட்டக்களப்பு நொச்சமுனை சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக்கழக உறுப்பினர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (01) மாலை நடைபெற்றது.

விளையாட்டுத்துறை அமைச்சினால் அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட தேசிய மல்யுத்த போட்டியிலேயே இந்த சாதனை படைக்கப்படுள்ளது.

இவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு கல்லடியில் உள்ள துளசி மண்டபத்தில் நடைபெற்றது.

சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக்கழக செயலாளார் திருச்செல்வத்தின் ஒழுங்கமைப்பிலும், சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டிலும் முகாமையாளர் ஸ்ரீகந்தராஜா தலைமையிலும் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனும், கௌரவ அதிதிகளாக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்சினி முகுந்தன், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஜெயக்குமார், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர் மா.சசிக்குமார், விளையாட்டு அமைச்சின் மாவட்ட இணைப்பாளர் ஆதம்லெப்பை உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன் ஆரம்ப நிகழ்வில் மல்யுத்த துறையில் உலக சாதனைகளை படைத்த சாண்டோ சங்கரதாஸ், சாண்டோ தியாகராஜா மற்றும் மாவட்டத்தில் மறைந்த விளையாட்டு வீரர்களுக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தியதன் பின்னர் நிகழ்வுகள் ஆரம்பமானது.

இதன்போது விளையாட்டுத்துறை அமைச்சினால் நடாத்தப்பட்ட அகில இலங்கை மல்யுத்தப்போட்டியில் சாதனைகளை நிலை நாட்டி, சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக்கழகத்தினை தேசிய சம்பியனாக மாற்றிய வீரர்கள் இதன்போது அதிதிகளினால் கௌரவிக்கப்பட்டனர்.

2025 விளையாட்டு அமைச்சின் உள்ளக அரங்கிலே கடந்த மாதம் 22, 23 நடைபெற்ற மல்யுத்த போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக போட்டியிட்ட சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டு கழக வீரர்கள்
2 தங்கப்பதக்கம், 3 வெள்ளி பதக்கம், 1வெண்கல பதக்கம் உட்பட ஆறு பதக்கங்களையும் வென்று, 20 புள்ளிகளையும் பெற்று வரலாற்றில் முதல் தடவையாக சம்பியன் கிண்ணத்தை சுவிகரித்து சாதனை படைத்துள்ளனர்.

இதன்போது சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக்கழகத்தின் பிரதம பயிற்றுவிப்பாளரும் கழகத்தின் செயலாளருமான திருச்செல்வம் அவர்களை மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர் மா.சசிக்குமார் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

இந்த சிறப்பு நிகழ்வில் சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக்கழகத்தின் மாணவர்கள், விளையாட்டு உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஆறு தொன் தங்கமும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிரப்பட வேண்டும்; சபா குகதாஸ்
செய்திகள்

ஆறு தொன் தங்கமும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிரப்பட வேண்டும்; சபா குகதாஸ்

June 7, 2025
மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கடவத்தையுடன் இணைக்கும் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்
செய்திகள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கடவத்தையுடன் இணைக்கும் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்

June 7, 2025
ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு ஓட்டமாவடி மைதானத்தில் இடம் பெற்ற பெருநாள் தொழுகையும் பெருநாள் கொத்பா பேருரையும்
செய்திகள்

ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு ஓட்டமாவடி மைதானத்தில் இடம் பெற்ற பெருநாள் தொழுகையும் பெருநாள் கொத்பா பேருரையும்

June 7, 2025
நோயாளர்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் கருத்திற்கொண்டு கைவிடப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டம்
செய்திகள்

நோயாளர்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் கருத்திற்கொண்டு கைவிடப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டம்

June 7, 2025
ஊழல் மற்றும் சட்டவிரோத செல்வம் தொடர்பான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் கோவில், விகாரைகளுக்கு படையெடுப்பு
செய்திகள்

ஊழல் மற்றும் சட்டவிரோத செல்வம் தொடர்பான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் கோவில், விகாரைகளுக்கு படையெடுப்பு

June 7, 2025
மட்டு புனித மரியாள் தேவாலயத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் 37வது ஆண்டு நினைவேந்தல்
காணொளிகள்

மட்டு புனித மரியாள் தேவாலயத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் 37வது ஆண்டு நினைவேந்தல்

June 7, 2025
Next Post
குளிர்பான போத்தல் மூடிகளுக்குள் போதைப்பொருள்

குளிர்பான போத்தல் மூடிகளுக்குள் போதைப்பொருள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.