Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் விடுவிப்பு; சி.ஐ.டியினர் விசாரணை

ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் விடுவிப்பு; சி.ஐ.டியினர் விசாரணை

7 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஜனாதிபதியின் பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி, வேறு கைதிகளை விடுவித்தது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்ட விசாரணை குறித்து, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த வெசாக் பௌர்ணமி தினத்தையொட்டி பொது மன்னிப்பு வழங்கும் திட்டத்தின் கீழ், அனுமதிக்கப்பட்ட கைதிகளுக்கு மேலதிகமாக, சில கைதிகளை சிறைச்சாலை நிர்வாகம் சட்டவிரோதமாக மன்னிப்பு வழங்கி விடுவித்ததாகக் கருதப்படும் சந்தேகநபர்கள் தொடர்பாக, கடந்த 06 ஆம் திகதி ஜனாதிபதி செயலத்தால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முறைப்பாடு ஒன்று அனுப்பப்பட்டிருந்தது.

அந்த முறைப்பாட்டின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் அது குறித்து விசாரணை செய்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஆவணங்களைப் பரிசீலித்து அவரிடமிருந்து வாக்குமூம் பதிவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, இந்த பொது மன்னிப்பு சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்டு, கடந்த வெசாக் தினத்தன்று சில கைதிகள் விடுவிக்கப்பட்டிருப்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்து கொண்டிருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு சட்டவிரோதமாக ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட கைதிகள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த விசாரணையில், இதற்கு முன்னரும் இவ்வாறு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவிருந்த கைதிகளில் அனுமதி பெறப்படாத கைதிகளும் விடுவிக்கப்பட்டிருப்பது தொடர்பான தகவல்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, இது தொடர்பாக எதிர்காலத்தில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும், நீதிமன்றத்தால் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட நபர்களை சிறைச்சாலைகளில் இருந்து சட்டவிரோதமாக விடுவிப்பது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பிள்ளையானிடம் சிக்கிய சட்லைட் தொலைபேசி; அசாத் மௌலானா தொடர்பில் அதிரடி முடிவு
செய்திகள்

பிள்ளையானிடம் சிக்கிய சட்லைட் தொலைபேசி; அசாத் மௌலானா தொடர்பில் அதிரடி முடிவு

June 8, 2025
மாத்திரைகளை அளவுக்கதிகமாக உட்கொண்ட முதியவர் உயிரிழப்பு
செய்திகள்

மாத்திரைகளை அளவுக்கதிகமாக உட்கொண்ட முதியவர் உயிரிழப்பு

June 8, 2025
அறுவை சிகிச்சை இல்லாமல் இரத்த நாளங்களிலிருந்து கொழுப்பை அகற்ற அறிமுகமான இயந்திரம்
செய்திகள்

அறுவை சிகிச்சை இல்லாமல் இரத்த நாளங்களிலிருந்து கொழுப்பை அகற்ற அறிமுகமான இயந்திரம்

June 8, 2025
இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது
செய்திகள்

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது

June 8, 2025
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாற்றுவதற்கு முயற்சி; சம்பிக்க குற்றச்சாட்டு
செய்திகள்

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாற்றுவதற்கு முயற்சி; சம்பிக்க குற்றச்சாட்டு

June 8, 2025
24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ள கால்நடை வைத்தியர்கள் சங்கம்
செய்திகள்

24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ள கால்நடை வைத்தியர்கள் சங்கம்

June 8, 2025
Next Post
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாற்றுவதற்கு முயற்சி; சம்பிக்க குற்றச்சாட்டு

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாற்றுவதற்கு முயற்சி; சம்பிக்க குற்றச்சாட்டு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.