வாழைச்சேனை கடதாசி ஆலை தற்போது லாபம் ஈட்டி வருவதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

நிறுவனம் தனது பழைய கடன்களை அடைத்து புதிய உற்பத்தி இயந்திரத்தை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தனது முகப்புத்தக கணக்கில் ஒரு பதிவில் இந்த விடயங்களை பதிவிட்டுள்ளார்.
அத்துடன், பாசிக்குடா நகரில் ஒரு சிறப்பு சுற்றுலா மையத்தை அமைக்கும் திட்டமும் இருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதன்போது, அருங்காட்சியகம், சாகச முகாம் தளம், புகைப்படம் எடுக்கும் மையம் மற்றும் புதிய சுற்றுலா வசதிகள் உள்ளிட்ட சுற்றுலா தொடர்பான பல்வேறு முயற்சிகள் இப்பகுதியில் உருவாக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறியுள்ளார்.