வவுனியாவில் நகைகளை திருடிய குற்றத்துக்காக 33 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா, சோயா வீதியிலுள்ள வீடொன்றில் கடந்த வாரம் திருட்டுச் சம்பவம் ஒன்று நடைபெற்ற நிலையில், குறித்த வீட்டினர் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
பொலிஸாரின் தீவிர தேடுதலில் வவுனியா, ஓமந்தை, புதியவேலர் சின்னக்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இளைஞரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவரிடம் 25.5 பவுண் தங்க நகைகள், அதாவது 66 இலட்சத்து 33 ஆயிரத்து 800 ரூபா பெறுமதியான தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேக நபரான இளைஞரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








