மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுர ஜெயசேகர கிழக்கு மாகாண இராணுவ தளபதியாக இருந்த காலத்தில் மனித உரிமை மீறல்கள் அல்லது உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையதாக கட்சி ஆய்வின்படி நிரூபிக்கப்பட்டால், அவருக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.
அவர் மேலும், இந்த விடயம் தொடர்பாக தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாக கூடி ஆலோசித்து, ஆதரிப்பதா, எதிர்ப்பதா, அல்லது புறக்கணிப்பதா என்பதில் முடிவு எடுப்போம் என்றார்.
“அனுர ஜெயசேகர தமிழ் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டால், அதை எதிர்க்க வேண்டிய நிலை உள்ளது. அதேவேளை, சம்பந்தமில்லையென்றும் ஆதாரங்கள் இருந்தால், வேறு தீர்மானம் எடுப்போம்,” எனவும் அவர் கூறினார்.
மேலும், கடந்த காலத்தில் சில இராணுவ தளபதிகள் மனித உரிமைகளை மீறியதையும், புதைகுழி சம்பவங்களில் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டதையும் நினைவூட்டினார். “தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக பிரேரணைக்கு ஆதரவு அளித்தது, அவர் அரசியல் சார்புடைய பொலிஸ் மா அதிபராக இருந்ததால்” என்றும் விளக்கம் அளித்தார்.








