கோட்டை நீதிமன்றத்திற்கு சிறைச்சாலை பேருந்தொன்று கொண்டு வரப்பட்டதால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவாளர்கள் மத்தியில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
பேருந்தை கண்டவுடன், ரணிலின் ஆதரவாளர்கள் கத்தி கூச்சலிட்டுள்ளனர்.
எனினும், குறித்த பேருந்து, சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை ஏற்றிச் செல்வதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் நீதிமன்ற அறையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, வழமைக்கு திரும்பியிருந்தது. மின்சாரம் தடைபட்டதால், வழக்கில் உத்தரவு வழங்குவது தாமதமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.








