பொலிஸாருக்கு 3,000 தடிகள் வாங்குவதற்கு விலைமனு கோரப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்தன.
நீண்ட காலமாக தடிகள் வாங்கப்படாத நிலையில், தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கலகக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின்போது கூட்டத்தைக் கலைக்க தடிகள் முக்கியமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக உயர்தரமான தடிகளை வாங்குவதற்கு விலைமனு செயல்முறை தொடங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.








