வெலிகம கடற்கரை வீதியில் நேற்று (02) இரவு இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 42 வயதுடைய ஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டவர் வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது மாத்தறையிலிருந்து காலி நோக்கிச் சென்ற ஜீப் மீது மோதியுள்ளார்.
விபத்தில் பலத்த காயமடைந்தவர், வலான வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் ஜீப்பின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








