அமெரிக்க டொலர்களில் வருமானம் ஈட்டும் வர்த்தக நிறுவனங்கள், தமக்குத் தேவையான எரிபொருளைத் தாமே இறக்குமதி செய்து, அதனை சுற்றுலா மற்றும் ஏற்றுமதித் துறைகளுக்கு விற்பனை செய்வதற்குத் தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று (17) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், இந்த நடைமுறை நாளை (18) முதல் அமலுக்கு வரும் எனக் குறிப்பிட்டார். கப்பல் வருகையில் ஏற்பட்டுள்ள தாமதத்தினால் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய இராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, அவசர டெண்டர்கள் மூலம் டீசல் மற்றும் பெற்றோலைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், QR முறைமை ஊடாக அத்தியாவசியத் தேவைகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்கவும், அமைச்சுகளின் எரிபொருள் பயன்பாட்டை 25% ஆல் குறைக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.








