மோட்டார் வாகனங்களுக்கான அபராதக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் வாகன போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி. பி. ஏ. சேனாதீர இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனங்களைச் செலுத்துதல் உள்ளிட்ட பல போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
எனினும், இவ்வாறான தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அதேவேளை, அதிக சத்தம் ஏற்படுத்தும் வகையில் மாற்றம் செய்யப்பட்ட சைலன்சர்கள் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு எதிராக தற்போது சட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொசோன் உற்சவ காலத்தில் வீதி போக்குவரத்து சட்டங்களை மேலும் கடுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி. பி. ஏ. சேனாதீர குறிப்பிட்டுள்ளார்.








