அரச ஊழியர்களுக்கு சலுகை விலையில் தவணை முறையில் 20 கிலோ அரிசி வழங்கும் புதிய வேலைத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் கீழ், 10 கிலோ வீதம் பச்சை அரிசி மற்றும் நாடு அரிசி ஆகிய இரண்டு பொதிகள் வழங்கப்படவுள்ளன. இதற்காக விவசாய அமைச்சு முன்மொழிவை சமர்ப்பித்துள்ளதாகவும், பயனாளிகளுக்கு வவுச்சர் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அந்த வவுச்சரை பயன்படுத்தி சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் இருந்து அரிசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும், உள்ளூர் விவசாயிகளின் அரிசி உற்பத்தியை ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.








