Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அஸ்வெசும நிதி மூலம் வேலைக்கு போகாமல் சாப்பிடப் பழகிக் கொண்ட இளையவர்கள்; “மீனைக் கொடுக்காமல் தூண்டிலை கொடுங்கள்” என்கிறார் பேராசிரியர்!

அஸ்வெசும நிதி மூலம் வேலைக்கு போகாமல் சாப்பிடப் பழகிக் கொண்ட இளையவர்கள்; “மீனைக் கொடுக்காமல் தூண்டிலை கொடுங்கள்” என்கிறார் பேராசிரியர்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அஸ்வெசும நிதி போன்ற அரசாங்கத்தின் திட்டங்களால் வேலை செய்யவேண்டிய இளையவர்கள் பலர் வீட்டில் இருந்து சும்மா சாப்பிடப் பழகிக் கொண்டார்கள் என்று களனி பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் எச். எம். நவரத்ன பண்டா தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலாக அதுபோன்ற இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொடுக்க அரசு வழிவகை செய்யலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வற் அதிகரிக்கும் போது, ​​நுகர்வோர் சிக்கலை எதிர்கொள்கிறார். பொருட்களின் விலை அதிகமாக இருப்பதால் நுகர்வை மட்டுப்படுத்தியுள்ளனர். நுகர்வைக் கட்டுப்படுத்தப்பட்டதன் காரணமாக உற்பத்தியாளர்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் அளவு குறைந்துள்ளது. அவர்களை ஊக்குவிக்கும் திட்டம் வேண்டும்.

அப்படியானால் தான் இந்த நாட்டை பொருளாதார ரீதியாக அபிவிருத்தி செய்ய முடியும். அந்த விஷயங்களை ஊக்குவிக்க அரசாங்கம் மற்றொரு திட்டத்தை செயல்படுத்த வேண்டியது அவசியம்.

பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையை வரிகளால் மட்டுமே கொண்டு வர முடியாது, வரி விதிப்பதன் மூலம் பொருளாதாரத்தை மேலும் சுருங்கச் செய்கின்றனர். வரிகளை வசூலித்த பிறகு அதை என்ன செய்வது என்பது அடுத்த கேள்வி.

சில சமயங்களில் அஸ்வெசும என்று சொல்லப்படும் நிவாரண நிதிக்க அரச வரவு செலவு திட்டத்திலிருந்து அதிகப் பணத்தை ஒதுக்குவதைப் பார்க்கிறோம். அப்படியானால், அந்தப் பணத்தில் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

வேலைவாய்ப்புகளை வழங்குவதன் மூலம் மக்கள் சம்பாதித்து சாப்பிடக்கூடிய பொருளாதாரத்தை உருவாக்குவது முக்கியம்.

ஊனமுற்றோர், பார்வைக் குறைபாடு, செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு இவற்றைக் கொடுத்தால் பரவாயில்லை என்று அர்த்தம்.

மற்றொன்று 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் இருக்கலாம். அவர்களுக்கும் கொடுக்க வேண்டும். ஆனால் தொழில் செய்யக் கூடியவர்களுக்கு கொடுப்பதை மட்டும் எதிர்க்கிறோம். அதன் காரணமாக தினமும் சும்மா இருந்து சாப்பிட பழகிக் கொள்கிறார்கள். வரிப்பணத்தில் அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவது, அவர்களுக்கு உணவு கொடுப்பதை விட சிறந்தது.

1948 முதல் இன்று வரை, மக்கள் சும்மாயிருந்து சாப்பிடக் கூடிய பொருளாதாரத்தை சுமார் 75 ஆண்டுகளாக நாங்கள் செய்து வருகிறோம்.

எனவே ‘மீனைக் கொடுக்காமல் தூண்டிலை கொடுங்கள்’. அதைத்தான் அரசு வரிப்பணத்தில் செய்ய வேண்டும். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் துரிதப்படுத்துகிறது. விதிக்கப்படும் வரியிலிருந்தும் பலன்களைப் பெறலாம் என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

60 வகையான மருந்துகளின் விலைகளை திருத்தியமைக்க நடவடிக்கை
செய்திகள்

60 வகையான மருந்துகளின் விலைகளை திருத்தியமைக்க நடவடிக்கை

June 19, 2026
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள், வலைகள் வழங்கல்!
செய்திகள்

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள், வலைகள் வழங்கல்!

June 19, 2026
நெடுந்தீவில் காணாமல் போன மீனவர் நாகபட்டினத்தில் சடலமாக மீட்பு
செய்திகள்

நெடுந்தீவில் காணாமல் போன மீனவர் நாகபட்டினத்தில் சடலமாக மீட்பு

June 19, 2026
கிரானில் உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு
செய்திகள்

கிரானில் உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

June 19, 2026
எல் நினோ காலநிலை மாற்றத்தினால் இலங்கைக்கு பாதிப்பு குறைவு; விவசாயத் திணைக்களம்
செய்திகள்

எல் நினோ காலநிலை மாற்றத்தினால் இலங்கைக்கு பாதிப்பு குறைவு; விவசாயத் திணைக்களம்

June 19, 2026
அம்பாறையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்; அமைச்சர்களின் படங்களை மாட்டின் கொம்புகளில் கட்டி எதிர்ப்பு
செய்திகள்

அம்பாறையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்; அமைச்சர்களின் படங்களை மாட்டின் கொம்புகளில் கட்டி எதிர்ப்பு

June 19, 2026
Next Post
பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 10 வருட கடூழிய சிறை!

பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 10 வருட கடூழிய சிறை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.