மட்டு ஆரையம்பதி , அருள்மிகு ஸ்ரீ திருநீலகண்ட விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபன பெருவிழா கிரியைகள் எதிர் வரும் 18.04.2024 ஆம் திகதி ஆரம்பமாகிறது.
இவ்வாறு ஆரம்பமாகும் புனராவர்த்தன அஷ்ட பந்தன பஞ்ச குண்ட பக்ஷ மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா விஞ்ஞாபனத்தின் கிரியை கால நிகழ்வுகள் நான்கு நாட்கள் நடைபெறும், என்பதுடன் 20.04.2024 வெள்ளிக்கிழமை காலை 8.00 தொடக்கம் பிற்பகல் 3:00 மணி வரை
எண்ணெய்க்காப்பு நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
இவ்வாறான ஆரம்ப கால கிரியை நிகழ்வுகளின் இறுதியாக 21.04.2024 அன்று மஹாகும்பாபிஷேக நிகழ்வும் நடைபெற இருப்பதுடன், இதில் பக்த அடியார்களையும் கலந்து கொள்ளுமாறு ஆலய நிர்வாகத்தினர் கேட்டு கொண்டுள்ளனர்.









