Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரஷ்ய- உக்ரைன் போர் முனைக்கு இலங்கையர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்ட இருவர் கைது!

ரஷ்ய- உக்ரைன் போர் முனைக்கு இலங்கையர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்ட இருவர் கைது!

2 years ago
in செய்திகள்

ரஷ்ய இராணுவ சேவைக்கு இலங்கையர்களை அனுப்பும் விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில் இதனுடன் தொடர்புபட்ட உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் மற்றும் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் இவர்கள் நேற்று (15) கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா வீசா மூலம் இலங்கையர்களை ரஷ்ய இராணுவத்தில் சிவில் சேவைக்கு அனுப்புவதாக கூறி ஒவ்வொருவரிடமும் தலா 15 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டு, ரஷ்ய உக்ரைன் போர் முனைக்கு செல்லும் நிலைக்கு இலங்கையர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த முகவர் நிறுவனம் மேற்கொண்ட மோசடி தொடர்பில் பணியகத்திற்கு 7 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன், அந்த முறைப்பாடுகளின்படி, இந்த முகவர் நிறுவனத்தினால் மோசடி செய்யப்பட்ட பணத்தின் தொகை ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமாகும்.

அதன்படி நேற்று நுகேகொட ஸ்டான்லி திலகரத்ன மாவத்தையில் இயங்கி வந்த குறித்த நிறுவனத்தை சுற்றிவளைத்து அதன் உரிமையாளர் மற்றும் முகாமையாளர் என இருவர் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரின் வாக்குமூலங்களை பதிவு செய்த பின்னர், அவர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி காலமானார்
செய்திகள்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி காலமானார்

June 22, 2026
தாதியர்களுக்கு பணிச்சுமையால் மனஅழுத்தம்; தாதியர் சேவை சங்கம் தெரிவிப்பு
செய்திகள்

தாதியர்களுக்கு பணிச்சுமையால் மனஅழுத்தம்; தாதியர் சேவை சங்கம் தெரிவிப்பு

June 22, 2026
அல்பேனிய குகையில் ஆச்சரிய கண்டுபிடிப்பு; உலகின் மிகப்பெரிய நிலத்தடி ஏரி கண்டுபிடிப்பு!
உலக செய்திகள்

அல்பேனிய குகையில் ஆச்சரிய கண்டுபிடிப்பு; உலகின் மிகப்பெரிய நிலத்தடி ஏரி கண்டுபிடிப்பு!

June 22, 2026
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவர் நீர்கொழும்பில் கைது!
செய்திகள்

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவர் நீர்கொழும்பில் கைது!

June 22, 2026
மட்டு நகரில் உணவகம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் திருடிவர் கைது
செய்திகள்

மட்டு நகரில் உணவகம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் திருடிவர் கைது

June 21, 2026
செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 400 தாண்டியது
செய்திகள்

செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 400 தாண்டியது

June 21, 2026
Next Post
வீட்டில் திருடிக்கொண்டு தப்ப முயன்ற திருடன் கீழே விழுந்து உயிரிழப்பு!

வீட்டில் திருடிக்கொண்டு தப்ப முயன்ற திருடன் கீழே விழுந்து உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.