Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு கல்லடிப்பாலத்திற்கு அருகாமையில் காணி அபகரிக்கும் செயற்பாடு முறியடிப்பு!

மட்டு கல்லடிப்பாலத்திற்கு அருகாமையில் காணி அபகரிக்கும் செயற்பாடு முறியடிப்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள தாழ் நில பகுதியினை அத்துமீறிய வகையில் பிடிக்க முயன்ற நடவடிக்கை முறியடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள தாழ் நில பகுதியினை சிலர் அபகரிப்பதற்காக தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், இதனை தொடர்ந்து நேற்று (26) தொடக்கம் ஒரு குழுவினர் குறித்த பகுதியில் பாதுகாப்பு கமராக்களை பூட்டி அப்பகுதியில் வேலிகள் இடும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஆகியோரின் கவனத்திற்கு பொதுமக்களால் கொண்டுவரப்பட்டதையடுத்து,
இதன்போது குறித்த இடத்திற்கு சென்ற இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் மட்டக்களப்பு மாநகரசபையின் உதவியுடன் குறித்த பகுதியில் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்பினை தடுத்து நிறுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.

அங்கு காணிகளை அடைப்பதற்காக கொண்டுவரப்பட்ட பொருட்கள் மற்றும் பாதுகாப்பு கமராக்ககள் என்பன அகற்றப்பட்டு, மாநகரசபையின் வாகனங்களில் ஏற்றப்பட்டு, மாநகரசபைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்ட நிலையில் அங்குவந்த காத்தான்குடி பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த காணி தொடர்பான வழக்கு மட்டக்களப்பு நீதிமன்றங்களில் நடைபெற்றுவரும் நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அங்கு தெரிவிக்கப்பட்டது.

குறித்த பகுதியானது மட்டக்களப்பு பகுதிகளில் ஏற்படும் வெள்ள நிலைமைகளின்போது வெள்ள நீர் வழிந்தோடுவதற்கான பிரதான பகுதியாக காணப்படுவதுடன் அது அடைக்கப்படுமானால் கல்லடி தொடக்கம் காத்தான்குடி வரையான பகுதி வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலத்தில் இந்த பகுதியை அடைப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட பல முயற்சிகள் தடுத்துநிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்றதாக இருவர் கைது!
செய்திகள்

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்றதாக இருவர் கைது!

June 17, 2026
அரசு விவசாயிகள், மீனவர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றியுள்ளது; சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு!
செய்திகள்

அரசு விவசாயிகள், மீனவர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றியுள்ளது; சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு!

June 17, 2026
அமெரிக்க தம்பதியருக்கு பிறந்த ஆசியக் குழந்தை; பெற்றோர் எடுத்துள்ள முக்கிய முடிவு
உலக செய்திகள்

அமெரிக்க தம்பதியருக்கு பிறந்த ஆசியக் குழந்தை; பெற்றோர் எடுத்துள்ள முக்கிய முடிவு

June 17, 2026
கோட்டாபயவின் ரிட் மனு விசாரணையில் இருந்து நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ விலகல்
செய்திகள்

கோட்டாபயவின் ரிட் மனு விசாரணையில் இருந்து நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ விலகல்

June 17, 2026
யோஷித ராஜபக்ஷ பிணையில் விடுதலை
செய்திகள்

யோஷித ராஜபக்ஷ பிணையில் விடுதலை

June 17, 2026
ஆஷு மாரசிங்க எமது கட்சி உறுப்பினர் அல்ல என அறிவித்தது ஐக்கிய தேசியக் கட்சி
செய்திகள்

ஆஷு மாரசிங்க எமது கட்சி உறுப்பினர் அல்ல என அறிவித்தது ஐக்கிய தேசியக் கட்சி

June 17, 2026
Next Post
திருமண நிகழ்வில் மோதல்; இருவர் வைத்தியசாலையில் அனுமதி!

திருமண நிகழ்வில் மோதல்; இருவர் வைத்தியசாலையில் அனுமதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.