Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சோழன் உலக சாதனை படைத்த 04 வயது சிறுவன் அக்லான் பிலாலுக்கு விருது

சோழன் உலக சாதனை படைத்த 04 வயது சிறுவன் அக்லான் பிலாலுக்கு விருது

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மிகப் பெரிய எண்களையும், 10 இன் அடுக்கிலிருந்து அவற்றின் 100 ஆம் அடுக்குகள் வரையும் ஆங்கில மொழியில் கூறி சோழன் உலக சாதனை படைத்த 4 வயது சிறுவன் மொஹமட் அக்லான் பிலாலுக்கு விருது வழங்கும் நிகழ்வு நேற்று (29) கின்னியா மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

திருகோணமலை மாவட்டம் கிண்ணியாவில் வசித்து வரும் இயன்முறை மருத்துவர்களான திரு.மொஹமட் நஸ்மி மற்றும் திருமதி. பாதிமா பாசீஹா போன்றோரின் 4 வயது மகனான மொஹமட் அக்லான் பிலால் கணித அடுக்குகளின் விதிகள் (Low of Exponents) முறையில் 10 இன் அடுக்குகளை அவற்றின் 100 ஆம் அடுக்குகள் வரையும், மிகப் பெரிய எண்களை இலகுவாகவும் ஆங்கில மொழியில் கூறியும் சோழன் உலக சாதனை படைக்கும் முயற்சி மேற்கொண்டார்.

இவருடைய உலக சாதனை முயற்சியை முறைப்படி கண்காணித்த சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நடுவர்களான மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் திரு. கதிரவன் இன்பராசா, திருகோணமலை மாவட்டத் தலைவர் திரு. தனராஜ், திருகோணமலை மாவட்டப் பொதுச் செயலாளர் திரு.சுயந்தன் விக்னேஸ்வர ராஜா மற்றும் செயற்குழு உறுப்பினர் திரு. மொஹமட் பர்சான் போன்றோர், உலக சாதனையை உறுதி செய்து சாதனை சிறுவனுக்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், தங்கப் பதக்கம், நினைவுக் கேடயம், அடையாள அட்டை மற்றும் பைல் போன்றவற்றை சிறப்பு விருந்தினர்களாக பங்கு கொண்டவர்களுடன் இணைந்து வழங்கிப் பாராட்டினார்கள்.

இந்த நிகழ்வு கின்னியா மத்திய கல்லூரியில் நடைபெற்ற அதேவேளை சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம் மற்றும் பீபல்ஸ் ஹெல்பிங் பீபில்ஸ் பவுண்டேஷன் போன்ற அமைப்புகள் இணைந்து நடத்தியிருந்தன.

இந்த நிகழ்வினை கதிரவன் இன்பராசா அவர்கள் தலைமையேற்று தொடங்கி வைக்க கிண்ணியா வளையக்கல்வி பணிப்பாளர் திருமதி.முனவ்வரா, கின்னியா மத்திய கல்லூரியின் அதிபர் திரு நஜாத்,கின்னியாவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி மருத்துவர் திரு.சமீம் மற்றும் குறிஞ்சாகேணி சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் அஜித் போன்றோர் சிறப்பு விருந்தினராக பங்கு கொண்டு சோழன் உலக சாதனை படைத்த சிறுவனை வாழ்த்தி சிறப்புரையாற்றினார்கள்.

விவசாயத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கலாநிதி திரு.ஹூஸைன், கிண்ணியா அல்-அக்ஸா கல்லூரியின் அதிபர் திரு.முனவ்பர், கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் அதிபர் திருமதி.நஸீரா நஜாத் போன்றோர் கௌரவ விருந்தினர்களாகப் பங்கு கொண்டு சிறுவன் அக்லான் பிலாலை மேடையில் வாழ்த்திப் பாராட்டிப் பேசினார்கள்.

இந்தியாவில் இருந்து நேரலையில் நிகழ்வைக் கண்காணித்துக் கொண்டிருந்த சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன் மற்றும் சிறப்பு நடுவர் திரு.சிவ ஷங்கரன் போன்றோர் சோழன் உலக சாதனை படைத்த சிறுவனை பாராட்டி வாழ்த்தியதோடு, இச் சிறிய வயதில் உலக சாதனை படைத்த சிறுவன் அக்லான் பிலாலை பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊர் மக்கள் என பலரும் வாழ்த்தி ஊக்கப்படுத்தியிருந்தது மேலும் குறிபிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சூடுபிடிக்கும் கைதிகளை விடுவித்த விவகாரம்; சிறைச்சாலைகள் ஆணையாளரை பணி இடைநீக்கம் செய்ய தீர்மானம்
செய்திகள்

சூடுபிடிக்கும் கைதிகளை விடுவித்த விவகாரம்; சிறைச்சாலைகள் ஆணையாளரை பணி இடைநீக்கம் செய்ய தீர்மானம்

June 9, 2025
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களின் விபரங்களை வெளியிட்டார் கம்மன்பில
செய்திகள்

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களின் விபரங்களை வெளியிட்டார் கம்மன்பில

June 9, 2025
இன்று முதல் அமுலுக்கு வருகிறது ட்ரம்பின் 12 நாடுகளுக்கான தடை
உலக செய்திகள்

இன்று முதல் அமுலுக்கு வருகிறது ட்ரம்பின் 12 நாடுகளுக்கான தடை

June 9, 2025
முகக்கவசத்துக்கு உடனடியாக கட்டுப்பாட்டு விலையை விதிக்க வேண்டும்; தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர்
செய்திகள்

முகக்கவசத்துக்கு உடனடியாக கட்டுப்பாட்டு விலையை விதிக்க வேண்டும்; தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர்

June 9, 2025
17 சபைகளிலும் ஆட்சி அமைப்போம் குறுக்கே எவரும் வர வேண்டாம்; சுமந்திரன் எச்சரிக்கை
அரசியல்

17 சபைகளிலும் ஆட்சி அமைப்போம் குறுக்கே எவரும் வர வேண்டாம்; சுமந்திரன் எச்சரிக்கை

June 9, 2025
வவுனியாவிலுள்ள வீட்டுக்குள் மறைக்கப்பட்ட நிலையில் 10 கிலோ கஞ்சா மீட்பு; சந்தேக நபர் கைது
செய்திகள்

வவுனியாவிலுள்ள வீட்டுக்குள் மறைக்கப்பட்ட நிலையில் 10 கிலோ கஞ்சா மீட்பு; சந்தேக நபர் கைது

June 9, 2025
Next Post
யாழில் சடலமாக மீட்கப்பட்ட கணவன் மனைவி; பொலீசார் தீவிர விசாரணை

யாழில் சடலமாக மீட்கப்பட்ட கணவன் மனைவி; பொலீசார் தீவிர விசாரணை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.