Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சொந்த நாட்டிற்கு என்னை அனுப்புங்கள்; இந்தியாவில் முட்டியிட்டிட்டு கதறும் இலங்கை அகதி

சொந்த நாட்டிற்கு என்னை அனுப்புங்கள்; இந்தியாவில் முட்டியிட்டிட்டு கதறும் இலங்கை அகதி

6 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

தனது சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும், இல்லை என்றால் உரிய அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இலங்கை அகதி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போர் காரணமாக 1997 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜாய் (30) என்பவர் தனது 8 வயதில் இலங்கையில் இருந்து கடல் வழியாக தனுஷ்கோடிக்கு அகதியாக வந்து மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டார்.

குறித்த நபர், மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் இருந்து தப்பி, தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அங்கு உள்ள மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து 1997 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற உள்ள நாட்டு போரின் போது இரவு தூங்கி கொண்டிருந்த தன்னை தனது பெற்றோர் படகில் இந்தியாவிற்கு ஏற்றி விட்டு விட்டதாகவும்,

காலையில் கண் விழித்து பாத்த போது தான் தனுஷ்கோடி கடற்கரையில் தமிழகத்திற்கு அகதிகளாக வந்த இலங்கை தமிழர்களுடன் இருந்ததாகவும், பின் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் தனது சொந்த நாடான இலங்கைக்கு திரும்பி அனுப்பி வைக்குமாறு மனு கொடுத்து வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அப்போது அவர் மீது நாகர்கோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந் நிலையில் அங்குள்ள நீதிமன்றம் உடனடியாக குறித்த நபரை இலங்கையில் இருக்கும் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதுவரை ஜாய் இலங்கை திரும்பி செல்ல நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதையடுத்து நேற்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த ஜாய் ஆட்சியர் அலுவலகம் அருகே முட்டியிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது குறித்து தகவலறிந்த கேணிக்கரை பொலிசார் அவரை க்யூ பிரிவு அலுவலகத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

இலங்கை தமிழர் ஜாய் முட்டியிட்டு ஆட்சியர் அலுவலகம் அருகே தர்ணாவில் ஈடுபட்டதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஜனாதிபதி செய்தாரா? மக்கள் யாரை நம்புவது? அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்!; நிசாம் காரியப்பர்
செய்திகள்

ஜனாதிபதி செய்தாரா? மக்கள் யாரை நம்புவது? அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்!; நிசாம் காரியப்பர்

June 8, 2025
சம்மாந்துறையில் போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
செய்திகள்

சம்மாந்துறையில் போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

June 7, 2025
வீட்டுப்பாடம் செய்யாத காரணத்தால் மாணவியின் வாய்த்தாடையை உடைத்த ஆசிரியர்
செய்திகள்

வீட்டுப்பாடம் செய்யாத காரணத்தால் மாணவியின் வாய்த்தாடையை உடைத்த ஆசிரியர்

June 7, 2025
தமிழரசுக் கட்சி மட்டுமல்ல எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது; தேசிய மக்கள் சக்தி
அரசியல்

தமிழரசுக் கட்சி மட்டுமல்ல எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது; தேசிய மக்கள் சக்தி

June 7, 2025
கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் வேன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி
செய்திகள்

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் வேன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி

June 7, 2025
ஆறு தொன் தங்கமும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிரப்பட வேண்டும்; சபா குகதாஸ்
செய்திகள்

ஆறு தொன் தங்கமும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிரப்பட வேண்டும்; சபா குகதாஸ்

June 7, 2025
Next Post
ஈஸ்டர் குண்டுவெடிப்பு விவகாரம்; மைத்திரிபால தரப்பினரின் கோரிக்கை நிராகரிப்பு

ஈஸ்டர் குண்டுவெடிப்பு விவகாரம்; மைத்திரிபால தரப்பினரின் கோரிக்கை நிராகரிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.