Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொலிஸாரால் முறையற்ற விதத்தில் தாக்கப்பட்ட பண்ணையாளர்கள்; கிழக்கு பல்கலைக்கழக மாணவர் சங்கம் கண்டனம்!

பொலிஸாரால் முறையற்ற விதத்தில் தாக்கப்பட்ட பண்ணையாளர்கள்; கிழக்கு பல்கலைக்கழக மாணவர் சங்கம் கண்டனம்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பில் நேற்று 08 இடம்பெற்ற பண்ணையாளர்களின் போராட்டத்தில் பொலிஸார், பெண்கள் மீது மோசமான முறையில் நடந்து கொண்ட விதம் தொடர்பாகவும்,சர்வதேச விசாரணை ஊடாக பாதிக்கப்பட்ட மக்கள் தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்கு சர்வதேசம் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக கலை மற்றும் கலாச்சார மாணவர் சங்கத்தினரால் அறிக்கை ஒன்று நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

மட்டக்களப்பு செங்கல்லடியில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில், இலங்கை காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட வன்செயலை கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றயத்தினராகிய நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். மட்டக்களப்பு மாவட்ட பண்ணையாளர்களின் கால்நடைகளுக்கான, மேச்சல் தரையாக ஒதுக்கப்பட்ட மயிலந்தனை மற்றும் மாதவனை பகுதிகளில் சிங்கள விவசாயிகள், இலங்கை சிங்கள பௌத்த அரச மற்றும் அதிகாரிகளின் ஆதரவுடன் ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பலவருடங்களாக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை கூறாது, குற்றவாளிகளை பாதுகாத்தும் பாதிக்கப்பட்டவர்களின் உறவுகளை அச்சுறுத்தியும் வருவதுடன் சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது எனவும் சிங்கள இனவாத அரசு கூறி வருகிறது.

இன்று மட்டக்களப்பு – செங்கலடி மத்திய கல்லூரிக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க வருகைத் தருவதனை முன்னிட்டு இவர்கள் அதிபர் பயணிக்கும் வீதியில் ஒன்று திரண்டு அமைதியான வழியில் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியபோது இலங்கை காவல்த்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதுடன் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மட்டக்களப்பு, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி அ. அமலநாயகி உட்பட பெண்கள் உட்பட கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பண்ணையாளர்கள், சமூகசெயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆண் மற்றும் பெண் பொலிசாரால் முறையற்ற விதத்தில் தாக்கப்பட்டதுடன்; அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு தாக்கப்பட்டவர்களில் பல பெண்கள் மயக்கமடைந்ததுடன், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க மட்டக்களப்பு மாவட்ட தலைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் இனத்துவ மற்றும் மத ரீதியில் சட்டம் வளைக்கப்படுவதையும், மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுவழங்காமல் ஏமாற்றுவதையும் சட்ட விரோத குடியேற்றங்களுக்கு ஆதரவு வழங்குவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.அதேவேளை அமைதி வழியில்போராடுபவர்களின் உரிமைக்குரலை வன்முறை மூலம் அடக்க நினைக்கும் அரச பயங்கரவாதத்தையும் கண்டிக்காமல் மௌனமாக இருக்கமுடியாது.

அந்த வகையில் நாட்டில் சட்டம் இயற்றுபவர்களாளும் சட்டத்தை பாதுகாப்பவர்களாளும் ‘சட்டம்’ மீறப்படுவதனையும் மக்கள் மீது வன்முறைகட்ட விழ்த்துவிடப்படுவதனையும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றயத்தினராகிய நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி உள்நாட்டில் கிடைக்க முடியாத நிலையில், சர்வதேச விசாரணை ஊடாக பாதிக்கப்பட்ட மக்கள் தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்கு சர்வதேசம் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு; ஜனவரி 19ஆம் திகதி உயர் நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு; ஜனவரி 19ஆம் திகதி உயர் நீதிமன்றம் உத்தரவு!

July 30, 2026
யானை – மனித மோதலுக்கு தீர்வு – யானைகளை தடுக்க மூங்கில் அரண்; இலங்கைக்கு சீனா வழங்கும் புதிய தொழில்நுட்ப உதவி!
செய்திகள்

யானை – மனித மோதலுக்கு தீர்வு – யானைகளை தடுக்க மூங்கில் அரண்; இலங்கைக்கு சீனா வழங்கும் புதிய தொழில்நுட்ப உதவி!

July 30, 2026
கோட்டாபயவின் முன்னாள் செயலாளர் மீண்டும் விளக்கமறியலில்!
செய்திகள்

கோட்டாபயவின் முன்னாள் செயலாளர் மீண்டும் விளக்கமறியலில்!

July 30, 2026
மின் கோபுரத்தில் ஏறிய நபருக்கு நீதிமன்ற அதிரடி உத்தரவு; மின்சார சபைக்கு இழப்பீடு!
செய்திகள்

மின் கோபுரத்தில் ஏறிய நபருக்கு நீதிமன்ற அதிரடி உத்தரவு; மின்சார சபைக்கு இழப்பீடு!

July 30, 2026
கடற்பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை; மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் அபாயம்!
செய்திகள்

கடற்பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை; மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் அபாயம்!

July 30, 2026
சேவை துப்பாக்கியால் விபரீத முடிவு; 28 வயது காவலரின் மரணம் குறித்து வெளியான தகவல்!
செய்திகள்

சேவை துப்பாக்கியால் விபரீத முடிவு; 28 வயது காவலரின் மரணம் குறித்து வெளியான தகவல்!

July 30, 2026
Next Post
வடகிழக்கில் பூரண ஹர்த்தால்; திகதியை அறிவித்தது தமிழ் கட்சிகள்!

வடகிழக்கில் பூரண ஹர்த்தால்; திகதியை அறிவித்தது தமிழ் கட்சிகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.