Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உளவு பார்க்கும் செயற்கைக்கோள்; வட கொரியாவுக்கு தென் கொரியா எச்சரிக்கை!

உளவு பார்க்கும் செயற்கைக்கோள்; வட கொரியாவுக்கு தென் கொரியா எச்சரிக்கை!

1 year ago
in உலக செய்திகள், செய்திகள், தொழில்நுட்பம், முக்கிய செய்திகள்

தென் கொரியாவின் எச்சரிக்கையையும் மீறி, உளவு செயற்கைக்கோளை ஏவ வட கொரியா தயாராவதால், கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் சூழ்ந்துள்ளது. இதனால் உக்ரைன், காசா வரிசையில் உலக நாடுகளின் கவலையில் கொரியாவும் சேர்ந்திருக்கிறது.

இந்நிலையில் வட கொரியா தனது உளவு செயற்கைக்கோளை ஏவுவதற்கான ஏற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று, தென் கொரிய இராணுவம் நேற்று (நவ.20) எச்சரிக்கை விடுத்தது.

நடப்பு ஆண்டில் மட்டும் இதுவரை 2 முறை உளவு செயற்கைக்கோளினை ஏவும் முயற்சியில் வடகொரியா தோல்வி கண்டிருக்கிறது. எனினும் 3வது முறையாக அடுத்த உளவு செயற்கைக்கோளினை ஏவும் முயற்சியில் தீவிரமாக உள்ளது.

தங்களது உளவுத் தகவல்களின் அடிப்படையில், இந்த வாரத்தில் வட கொரியா தனது உளவு செயற்கைக்கோளை ஏவ இருப்பதாக தென் கொரிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஷின் வோன் சிக் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் , ”இராணுவ உளவு செயற்கைக்கோளை ஏவுவதற்கான தயாரிப்புகளை உடனடியாக நிறுத்துமாறு வட கொரியாவை நாங்கள் கடுமையாக எச்சரிக்கிறோம்.

எச்சரிக்கையை மீறி ராணுவ உளவு செயற்கைக்கோளை ஏவ வடகொரியா முயற்சித்தால், எங்கள் நாட்டு மக்களின் உயிருக்கும், பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எங்கள் ராணுவம் மேற்கொள்ளும்” என்று தென் கொரிய ராணுவத்தின் தலைமை இயக்குனரான காங் ஹோ-பில் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் அதன் நட்பு நாடுகளின் எச்சரிக்கையை புறக்கணித்து, வடகொரியா இந்த ஆண்டின் தொடக்கம் முதலே அதிக ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. தென் கொரியா மீதும், அவசியமெனில் அமெரிக்கா மீதும், தாக்குதல் தொடுக்க வட கொரியா தயாராகி வருகிறது. தனது ராணுவ நடவடிக்கைகளுக்கு உதவும் நோக்கிலும், எதிரிகளின் நகர்வுகளை ஒற்றறியவும் உளவு செயற்கைக்கோளை வட கொரியா ஏவத் தயாராகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

அதிகாரத்திற்காக வடக்கிலும் தெற்கிலும் இனவாதம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது; ஜனாதிபதி அனுர
செய்திகள்

அதிகாரத்திற்காக வடக்கிலும் தெற்கிலும் இனவாதம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது; ஜனாதிபதி அனுர

May 19, 2025
சாதாரண தரப் பரீட்சையில் சித்திபெற்ற மற்றும் பெறாத மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவிப்பு
செய்திகள்

சாதாரண தரப் பரீட்சையில் சித்திபெற்ற மற்றும் பெறாத மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவிப்பு

May 19, 2025
முஸ்லிம் காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபை பட்டியல் ஆசனம் சுழற்சி முறையில் இருவருக்கு
அரசியல்

முஸ்லிம் காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபை பட்டியல் ஆசனம் சுழற்சி முறையில் இருவருக்கு

May 19, 2025
திருகோணமலை பகுதியொன்றில் துப்பாக்கிச்சூடு; இரண்டு மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரை
செய்திகள்

திருகோணமலை பகுதியொன்றில் துப்பாக்கிச்சூடு; இரண்டு மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரை

May 19, 2025
ஓட்டமாவடி-நாவலடி பிரதான வீதியில் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

ஓட்டமாவடி-நாவலடி பிரதான வீதியில் விபத்து; ஒருவர் உயிரிழப்பு

May 19, 2025
தேசிய போர்வீரர் தினத்தையொட்டி முப்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
செய்திகள்

தேசிய போர்வீரர் தினத்தையொட்டி முப்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

May 19, 2025
Next Post
ஆர்ஜென்டினாவுக்கு புதிய ஜனாதிபதி தெரிவு!

ஆர்ஜென்டினாவுக்கு புதிய ஜனாதிபதி தெரிவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.