Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் நிச்சயிக்கப்படும் திருமணங்கள் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் நிச்சயிக்கப்படும் திருமணங்கள் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் முக்கிய அறிவிப்பு!

3 years ago
in செய்திகள்

இலங்கையில் நிச்சயிக்கப்படும் திருமணங்கள் தொடர்பில், வெளிநாடுகளில் உள்ள தகுதிவாய்ந்த நீதிமன்றம் ஒன்றில் விவாகரத்தை பெற்றுக்கொள்வதற்கு, இலங்கையின் சட்டத்தில் எந்த தடையும் இல்லை என மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த வாரம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.

இதுவரை இலங்கையில் திருமணம் செய்துகொண்டு வெளிநாடுகளுக்குச் சென்ற இலங்கையர்கள் வெளிநாட்டு நீதிமன்றங்களில் பெற்ற விவாகரத்துகள், இலங்கையில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

எனினும் நீதியரசர் சோபித ராஜகருணா, நீதியரசர் தம்மிக்க கணேபொல ஆகியோர் இந்த தீர்ப்பை வழங்கியுள்ள நிலையில், குறித்த நடைமுறையில் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

பிரித்தானியாவைச் சேர்ந்த மனுதாரரான லியனகே சம்பிக்க ஹரேந்திர சில்வா என்பவர் 2018 ஆம் ஆண்டு தமது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.

தொடர்ந்து தனது சட்டத்தரணி ஊடாக, இலங்கையின் திருமணப் பதிவாளர் நாயகத்தின் 2021 மார்ச் மாத தீர்மானத்தை இரத்துச் செய்வதற்கான சான்றிதழொன்றை தாக்கல் செய்துள்ளார்.

எனினும் இலங்கையின் நடைமுறையில் உள்ள சட்டங்களின் கீழ் வெளிநாட்டில் பெற்ற அத்தகைய விவாகரத்தை அங்கீகரிக்க முடியவில்லை.

எனவே மனுதாரர் இலங்கையில் உள்ள தகுதி வாய்ந்த நீதிமன்றத்தில் ஆணையைப் பெற வேண்டும் என்று கூறப்பட்டது.

இதனையடுத்தே மனுதாரர், இலங்கையின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளார்.

இந்தநிலையிலேயே தற்போது இலங்கையர்கள் வெளிநாடுகளில் உள்ள தகுதிவாய்ந்த நீதிமன்றங்களில் விவாகரத்தை மேற்கொண்டால், அது இலங்கையில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

தென்காசி தீ விபத்து-இரண்டாவது நாளாக இடம்பெறும் மீட்பு பணி
செய்திகள்

தென்காசி தீ விபத்து-இரண்டாவது நாளாக இடம்பெறும் மீட்பு பணி

July 8, 2026
மண்ணெண்ணெயில் இயக்கப்பட்ட 4 பேருந்துகள் பறிமுதல்; சாரதிகள் நீதிமன்றில் ஆஜர்!
செய்திகள்

மண்ணெண்ணெயில் இயக்கப்பட்ட 4 பேருந்துகள் பறிமுதல்; சாரதிகள் நீதிமன்றில் ஆஜர்!

July 8, 2026
பாராளுமன்றத்தில் அர்ச்சுனாவும் பிரபுவும் மாறி மாறி கலாய்!
காணொளிகள்

பாராளுமன்றத்தில் அர்ச்சுனாவும் பிரபுவும் மாறி மாறி கலாய்!

July 8, 2026
மட்டக்களப்பு நகரக் கடைகளின் மின் இணைப்புகளை மீள் பரிசோதனை செய்ய வேண்டும்; பா. அரியநேத்திரன்
செய்திகள்

மட்டக்களப்பு நகரக் கடைகளின் மின் இணைப்புகளை மீள் பரிசோதனை செய்ய வேண்டும்; பா. அரியநேத்திரன்

July 8, 2026
வர்த்தக நிலையங்களுக்கு முன் வாகனங்களை நிறுத்தவேண்டாம்-மட்டு மாநகர சபை
காணொளிகள்

வர்த்தக நிலையங்களுக்கு முன் வாகனங்களை நிறுத்தவேண்டாம்-மட்டு மாநகர சபை

July 8, 2026
வர்த்தக நிலையங்களில் தீயணைப்பு கருவி கட்டாயம்; மட்டக்களப்பு மாநகரசபை அறிவிப்பு
செய்திகள்

வர்த்தக நிலையங்களில் தீயணைப்பு கருவி கட்டாயம்; மட்டக்களப்பு மாநகரசபை அறிவிப்பு

July 8, 2026
Next Post
காணாமலாக்கப்பட்டோர் விவகாரம்; அடுத்த ஆண்டிற்குள் தீர்வு என்கிறார் நீதி அமைச்சர்!

காணாமலாக்கப்பட்டோர் விவகாரம்; அடுத்த ஆண்டிற்குள் தீர்வு என்கிறார் நீதி அமைச்சர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.