Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சித்தங்கேணி இளைஞன் உயிரிழந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்வதை நிறுத்துங்கள்; சுயிந்தன் வேண்டுகோள்!

சித்தங்கேணி இளைஞன் உயிரிழந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்வதை நிறுத்துங்கள்; சுயிந்தன் வேண்டுகோள்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அலெக்ஸிற்கு நீதி வேண்டும் ஆனால் இந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்வதை வன்மையாக கண்டிக்கின்றோம் என வலிகாமம் மேற்கு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் துரைராஜா சுயிந்தன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அலெக்ஸிற்கு நடந்த விடயம் உண்மையில் கண்டிக்கப்பட வேண்டிய விடயம், அதற்கு நீதி வேண்டும். இந்த சம்பவத்தை வைத்துக் கொண்டு அரசியல் ரீதியான செயல்பாடுகளை செய்வதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

ஏனென்றால் அலெக்ஸிற்கு நீதி வேண்டும் என்பது உண்மையான விடயம் அது வட்டுக்கோட்டை பொலிஸாகவும் இருக்கலாம் அல்லது வேறு எந்த பொலிஸாகவும் இருக்கலாம் இதற்கு நீதி வேண்டும் என்பது கட்டாயத் தேவையாக இருக்கின்றது.

இது சம்பந்தமான அரசியல் சார்ந்த சில செயல்பாடுகளை முன்னெடுத்து, ஓரிருவரை வைத்து அரசியல் நாடகம் செய்வதை தமிழ் மக்களாகிய நாங்கள் நிராகரிக்கின்றோம். ஏன் என்று சொன்னால் நானும் கடந்த காலத்தில் பாதிக்கப்பட்ட ஒரு விடயத்திலே இந்த விடயத்தை தெளிவுபடுத்துகின்றேன்.

உண்மையில் அரசியல் சார்ந்த செயற்பாடுகளை அரசியலோடு வைத்திருக்க வேண்டும், மக்கள் சார்ந்த விடயங்களை மக்களுக்கு சரியான முறையில் வழிநடத்த வேண்டும். மக்களை பிழையான முறையில் வழி நடத்திக் கொண்டு அரசியல் ரீதியான செயல்பாடுகளை இந்த இடத்தில் கொண்டு காட்டுவது என்பது உண்மையில் கண்டிக்கப்பட வேண்டிய விடயம்.

உண்மையில் பொலிஸ் குற்றம் செய்திருக்கின்றது, பொலிஸாருக்கு தண்டனை கொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது, தண்டிக்கப்பட வேண்டும் என்பதும் நியாயமான கோரிக்கையாக இருக்கின்றது. அந்தக் கோரிக்கையை நாங்கள் மறுக்கவில்லை, அதற்கான நீதி கட்டாயம் தேவை அந்த நீதிக்காக நாங்கள் போராட வேண்டும்.

ஆனால் அரசியல் சார்ந்த தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தங்களுடைய சின்னங்கள் பொறிக்கப்பட்ட விடயங்களை காட்டி தங்களுக்கு சுயலாப அரசியலை தேடுகின்றவர்கள் உண்மையில் இந்த தமிழ் மக்களுக்காக இப்போது கதைப்பார்கள் நாளைக்கு இருக்க மாட்டார்கள்.

அலெக்ஸ் இறந்த உடன் இந்த இடத்துக்கு யாரும் வரவில்லை அது மன வேதனையான ஒரு விடயம். அந்த இடத்தில் நாங்கள் நின்றிருந்தோம். ஓரிரு பத்திரிகையாளர்களுடன் இரவு எட்டு மணி வரை இவ்விடத்தில் இருந்து இருக்கின்றோம். யாரும் வரவில்லை, தங்களுடைய தேவைகளுக்காக இப்போ வந்து ஒரு வேலை திட்டத்தை செய்கிறார்கள்.

உண்மையில் அலெக்ஸிற்கு இனி வரும் காலத்தில் ஒரு நீதி வேண்டும். அந்த நீதி நீதிமன்றத்தின் ஊடாக கட்டாயம் கிடைக்கும் என்பதை நாங்கள் விரும்புகின்றோம், அவர்கள் ஊடாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு உடனடியாக நடவடிக்கை தேவை என்பதையும் நாங்கள் விரும்புகின்றோம்.

இதில் மக்கள் யாரும் எந்த விடயத்தை கூறினாலும் அரசியல் செயற்பாட்டாளர்கள் அரசியல் சார்ந்த விடயங்களை மக்களை வைத்து பாவிக்க வேண்டாம் என்பதை நான் கூறுகின்றேன் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

மண்ணெண்ணெயில் இயக்கப்பட்ட 4 பேருந்துகள் பறிமுதல்; சாரதிகள் நீதிமன்றில் ஆஜர்!
செய்திகள்

மண்ணெண்ணெயில் இயக்கப்பட்ட 4 பேருந்துகள் பறிமுதல்; சாரதிகள் நீதிமன்றில் ஆஜர்!

July 8, 2026
பாராளுமன்றத்தில் அர்ச்சுனாவும் பிரபுவும் மாறி மாறி கலாய்!
காணொளிகள்

பாராளுமன்றத்தில் அர்ச்சுனாவும் பிரபுவும் மாறி மாறி கலாய்!

July 8, 2026
மட்டக்களப்பு நகரக் கடைகளின் மின் இணைப்புகளை மீள் பரிசோதனை செய்ய வேண்டும்; பா. அரியநேத்திரன்
செய்திகள்

மட்டக்களப்பு நகரக் கடைகளின் மின் இணைப்புகளை மீள் பரிசோதனை செய்ய வேண்டும்; பா. அரியநேத்திரன்

July 8, 2026
வர்த்தக நிலையங்களுக்கு முன் வாகனங்களை நிறுத்தவேண்டாம்-மட்டு மாநகர சபை
காணொளிகள்

வர்த்தக நிலையங்களுக்கு முன் வாகனங்களை நிறுத்தவேண்டாம்-மட்டு மாநகர சபை

July 8, 2026
வர்த்தக நிலையங்களில் தீயணைப்பு கருவி கட்டாயம்; மட்டக்களப்பு மாநகரசபை அறிவிப்பு
செய்திகள்

வர்த்தக நிலையங்களில் தீயணைப்பு கருவி கட்டாயம்; மட்டக்களப்பு மாநகரசபை அறிவிப்பு

July 8, 2026
ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
செய்திகள்

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

July 8, 2026
Next Post
உலக வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தவும், நிலைபேறான அபிவிருத்தியை உறுதி செய்யவும் பலதரப்பு அணுகுமுறை!

உலக வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தவும், நிலைபேறான அபிவிருத்தியை உறுதி செய்யவும் பலதரப்பு அணுகுமுறை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.