Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு அரசாங்க அதிபரை சந்திக்க சென்ற பெண் மீது தாக்குதல்!

மட்டு அரசாங்க அதிபரை சந்திக்க சென்ற பெண் மீது தாக்குதல்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

வாகரை கதிரவெளி புதூரைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் தமது மகனின் கண்முன்னே தாக்கி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பாக பாதிக்கப்பட்டவர் வாகரை பொலிஸ் நிலையத்தில்; மேற்கொண்ட முறைப்பாட்டினை அடுத்து சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர் கடந்த 25 ஆம் திகதியன்று (வியாழக்கிழமை) பிரதேசத்தில் இல்மனைட் தொழிற்சாலை அமைவதற்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை சந்திப்பதற்கு மட்டக்களப்பிற்கு செல்வதற்காக தயாராக வீதியில் நின்றிருந்த வேளை அவ்விடத்திற்கு வந்த சிலரால் தாக்குதலுக்குள்ளாக்கட்டிருந்தார்.

இதன்போது அவரது 4 வயது மகனும் உடன் இருந்துள்ளார்.தமது தாயார் தன் கண்முன்னே தாக்கப்படும் சம்பவத்தை கண்டு அச்சமடைந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

மகன் கண் முன்னே தாய் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

தமக்கு நிகழ்ந்த அநீதி தொடர்பாக நீதி கோரி வாகரை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதன்போது சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவதில் சற்று இழுபறி நிலை ஏற்பட்டதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு விடயம் தெரியப்படுத்தியதனை அடுத்து அவர் மேற்கொண்ட உடனடி நடவடிக்கையின் பயனாக கடந்த 29 ஆம் திகதி திங்கட்கிழமையன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாகரைப் பிரதேசத்தில் மேற்கொள்ள திட்டமிடப்படும் இறால் வளர்ப்பு திட்டம் மற்றும் இல்மனைட் தொழிற்சாலை அமைவதை முற்றாக தடை செய்யக்கோரிய கவனயீர்ப்பு போராட்டம் கடந்த 22.04.2024 ஆம் திகதியன்று வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டது.

அதன் எதிரொளியாக பிரதேசத்தில் இரு சாராருக்குமிடையில் வாக்குவாதமும் கைகலப்பும் அமைதியின்மையும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வாகரையில் இரு பிரிவினராக பிரிந்து கிடக்கும் பொதுமக்கள்; மட்டக்களப்பில் இரு வெவ்வேறு இடங்களில் போராட்டம்!

தொடர்புடையசெய்திகள்

18 லம்போர்கினி காரில் ஒன்றை ஓட்டுவதற்கு ஆவலாக உள்ளேன்; நாமல் ராஜபக்ச
செய்திகள்

18 லம்போர்கினி காரில் ஒன்றை ஓட்டுவதற்கு ஆவலாக உள்ளேன்; நாமல் ராஜபக்ச

June 24, 2026
“செம்மணி தமிழ் இனப்படுகொலைக்கான சாட்சி”; சிறிநாத்
காணொளிகள்

“செம்மணி தமிழ் இனப்படுகொலைக்கான சாட்சி”; சிறிநாத்

June 24, 2026
சுரேஷ் சலே விவகாரம்; பாப்பரசருக்கு கடிதம் அனுப்பிய தாயார்!
செய்திகள்

சுரேஷ் சலே விவகாரம்; பாப்பரசருக்கு கடிதம் அனுப்பிய தாயார்!

June 24, 2026
ராஜபக்ச குடும்பத்தினர் திட்டமிட்டு பழிவாங்கப்படுகின்றனர்; மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்டு!
செய்திகள்

ராஜபக்ச குடும்பத்தினர் திட்டமிட்டு பழிவாங்கப்படுகின்றனர்; மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்டு!

June 24, 2026
தூக்கி அடிக்குறதா?..தூக்காம அடிக்குறதா?;கிளிநொச்சியே மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டம்-அர்ச்சுனா
அரசியல்

தூக்கி அடிக்குறதா?..தூக்காம அடிக்குறதா?;கிளிநொச்சியே மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டம்-அர்ச்சுனா

June 24, 2026
352 மில்லியன் ரூபா பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருளுடன் கனேடிய யுவதி கைது!
செய்திகள்

352 மில்லியன் ரூபா பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருளுடன் கனேடிய யுவதி கைது!

June 24, 2026
Next Post
காங்கேசன் துறைமுக அபிவிருத்திக்கான மொத்த செலவையும் ஏற்றுக்கொண்ட இந்தியா!

காங்கேசன் துறைமுக அபிவிருத்திக்கான மொத்த செலவையும் ஏற்றுக்கொண்ட இந்தியா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.