Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புலிகளின் பத்திரிகையில் பணியாற்றியவர் சுட்டுக்கொலை!

புலிகளின் பத்திரிகையில் பணியாற்றியவர் சுட்டுக்கொலை!

2 years ago
in செய்திகள்

விடுதலைப் புலிகளின் பத்திரிகையில் பணியாற்றிய ஐ. டபிள்யூ. சஞ்சீவ (வயது 54) என்பவர் நேற்றுமுன்தினம் அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டார் என்று பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் தெரித்துள்ளனர்.சுட்டுக்கொல்லப்பட்ட நபர், இராணுவ புலனாய்வு பிரிவின் அதிகாரியான லெப். கேணல்துவான் முத்தலிப் கொலையுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கைதாகி விடுதலையானவர் என்றும் அறிய வருகின்றது.

இவர், கொழும்பு – பொரளை லெஸ்லி ரணகல மாவத்தையில் சனிக்கிழமை அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டார். தொழில் தகராறு காரணமாகவே அவர் கொல்லப்பட் டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர். இது குறித்து மேலும் அறிய வருவதாவது,களனி கல்பொரல்ல பகு தியை சேர்ந்த சஞ்சீவ அவரின் பூர்வீக வீட்டின் அருகில் வைத்தே சுட்டுக் கொல்லப்பட்டார். இவர், துப்புரவு சேவை ஒப்பந்தங்களை நிறுவனங்களிடம் பெற்று அவற்றுக்கு ஆட்களை சேர்க்கும் நிறுவனத்தை நடத்தி வருகின்றார். தினமும் அதிகாலை பொரளையில் உள்ள தனது பூர்வீக வீட்டுக்கு வருவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். அவ்வாறு வழமை போன்று, தனது மகளுடன் சனிக்கிழமை அதிகாலை களனியிலிருந்து பொரளைக்கு அன்றைய தினமும் சென்றுள்ளார்.சனிக்கிழமை அதிகாலை வீட்டின் முன்பாக நின்ற வரை மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் ரி-56 ரக துப்பாக்கியால் சுட்டார். இதில், அவர் காயமடைந்து தரையில் விழுந்துள்ளார். அதன் பின்னரும் துப்பாக்கி வேட்டுகள் தீர்க்கப்பட்டுள்ளன என்று விசார ணைகளில் தெரியவந்தது.

அவர் இறந்து கிடந்த இடத்தில் 20இற்கும் மேற் பட்ட ரி-56 ரக துப்பாக்கி தோட்டா கோதுகள் வீதி யில் சிதறிக் கிடந்தன.உயிரிழந்தவர் 2002 அரசு – புலிகள் சமா தான உடன் படிக்கை நடைமுறையிலிருந்த காலத்தில் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்த ஒரு பத்திரிகையில் பணியாற்றியவர் என்று என்று புலனாய்வு வட்டார தகவல்கள் கூறுகின்றன.2005 ஒக்ரோபர் 29 ஆம் திகதி நாரஹன் பிட்டியில் இராணுவ புலனாய்வு அதிகாரியாக இருந்த லெப். கேணல் துவான் முத்தலிப் கொல்லப்பட்டார். இந்தக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபராக இவரும் கைதுசெய்யப் பட்டு, பின்னர் விடுவிக்கப் பட்டார். அவரின் தற்போதைய துப்புரவு சேவை வணிகம் தொடர்பான தகராறு காரணமாக துப்பாக்கிச்சூடு நடந்திருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

அதிகாரத்திற்காக வடக்கிலும் தெற்கிலும் இனவாதம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது; ஜனாதிபதி அனுர
செய்திகள்

அதிகாரத்திற்காக வடக்கிலும் தெற்கிலும் இனவாதம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது; ஜனாதிபதி அனுர

May 19, 2025
சாதாரண தரப் பரீட்சையில் சித்திபெற்ற மற்றும் பெறாத மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவிப்பு
செய்திகள்

சாதாரண தரப் பரீட்சையில் சித்திபெற்ற மற்றும் பெறாத மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவிப்பு

May 19, 2025
முஸ்லிம் காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபை பட்டியல் ஆசனம் சுழற்சி முறையில் இருவருக்கு
அரசியல்

முஸ்லிம் காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபை பட்டியல் ஆசனம் சுழற்சி முறையில் இருவருக்கு

May 19, 2025
திருகோணமலை பகுதியொன்றில் துப்பாக்கிச்சூடு; இரண்டு மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரை
செய்திகள்

திருகோணமலை பகுதியொன்றில் துப்பாக்கிச்சூடு; இரண்டு மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரை

May 19, 2025
ஓட்டமாவடி-நாவலடி பிரதான வீதியில் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

ஓட்டமாவடி-நாவலடி பிரதான வீதியில் விபத்து; ஒருவர் உயிரிழப்பு

May 19, 2025
தேசிய போர்வீரர் தினத்தையொட்டி முப்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
செய்திகள்

தேசிய போர்வீரர் தினத்தையொட்டி முப்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

May 19, 2025
Next Post
யாழில் நீடிக்கும் குழப்பம்; கஜேந்திரன் எம். பியை தூக்கிக்கொண்டு சென்ற பொலிஸ்!

யாழில் நீடிக்கும் குழப்பம்; கஜேந்திரன் எம். பியை தூக்கிக்கொண்டு சென்ற பொலிஸ்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.