Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சம்பூரில் பெண்கள் மீது அடக்குமுறைகளை பிரயோகித்த பொலிஸார்; கொழும்பில் போராட்டத்தில் இறங்கிய சிங்கள மக்கள்!

சம்பூரில் பெண்கள் மீது அடக்குமுறைகளை பிரயோகித்த பொலிஸார்; கொழும்பில் போராட்டத்தில் இறங்கிய சிங்கள மக்கள்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

திருகோணமலை சம்பூர் பகுதியில், முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரித்த பெண்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் தற்போது மக்கள் மத்தியில் பாரிய அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.

சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களையும் பொலிஸாரின் இதுபோன்ற நடவடிக்கைக்கு தங்களது எதிர்ப்புக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

தமிழ் சமூகம் மாத்திரம் இன்றி சிங்கள தரப்பினரும், சமூக செயற்பாட்டாளர்களும் இந்த சம்பவத்திற்கு தங்களது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

பொலிஸாரின் இது போன்ற அராஜக செயற்பாடுகள் தொடரும் எனில், முழு நாடும் ஒன்றிணைந்து தங்களது எதிர்ப்பினை தெரிவிப்போம் என்று பெரும்பான்மை இன பெண்மணி ஒருவர் நேற்று (15) கொழும்பில் நடைபெற்ற சமூக செயற்பாட்டாளர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கையில்,
பெண்களிடத்தில் மிக மோசமான முறையில் பொலிஸார் நடந்துள்ளனர், யுத்தம் முடிந்து இதுவரை காலம் கடந்தும் வடக்கு, கிழக்கு வாழ் பொதுமக்கள் நிம்மதியாக வாழ முடியாத ஒரு சூழ்நிலை இப்பொழுதும் காணப்படுகிறது.

சுதந்திரமான ஒரு சூழ்நிலையை உருவாக்கி கொடுங்கள் என்ற வேண்டுகோளினையே அந்த மக்கள் கேட்டார்கள் ஆனால் அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அடக்குறைகள் முடிந்தபாடு இல்லை.

பெண்களை கைது செய்வதற்கு பெண் பொலிசார்களை ஈடுபடுத்தாமல், ஆண் பொலிசாரை வைத்து இழுத்து சென்றதற்கு பொலிஸ் மா அதிபரே காரணம், பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரிலேயே அனைத்தும் நடக்கின்றது என்று மேலும் தெரிவித்திருந்தனர்.

தொடர்புடையசெய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
Next Post
முள்ளிவாய்க்காலில் சர்வதேச ஊடகங்கள்!

முள்ளிவாய்க்காலில் சர்வதேச ஊடகங்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.