Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதில் சிக்கல்கள் இல்லை!

தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதில் சிக்கல்கள் இல்லை!

2 years ago
in செய்திகள்

தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கு போதுமான அளவு அட்டைகள் உள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், ஒரு நாள் சேவையின் கீழ் நாளாந்தம் 1500 இற்கும் மேற்பட்ட தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படுவதாக ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை போதிய அட்டைகள் இன்மையால் சேவைகளை பெற்றுக் கொள்ள செல்லும் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ள செய்திகள் தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இன்னும் உள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த போதிலும் பிரதேச செயலாளர்களின் மக்களின் கோரிக்கைக்கு அமைய ஜூலை மாதம் 30 ஆம் திகதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பயோமெட்ரிக் தரவுகளுடன் கூடிய புதிய இலத்திரனியல் அடையாள அட்டை இந்த வருட இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

முதன்முறையாக அடையாள அட்டை கோரி விண்ணப்பிக்கும் நபர்களுக்கு முதலில் புதிய அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதுடன் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு தற்போது உறுதிப்படுத்தல் கடிதம் மட்டுமே வழங்கப்படுகிறது.

மேலும், எவ்வாறாயினும், அனைத்து குடிமக்களுக்கும் ஒரு வருடத்திற்குள் பயோமெட்ரிக் தரவுகளுடன் கூடிய புதிய இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கப்படுமென பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

யோஷித ராஜபக்ஷ, வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகள் கையளிப்பு!
செய்திகள்

யோஷித ராஜபக்ஷ, வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகள் கையளிப்பு!

August 20, 2026
ஈரானுக்கு எதிராக கடும் பொருளாதார நடவடிக்கை; ட்ரம்ப் எச்சரிக்கை!
உலக செய்திகள்

ஈரானுக்கு எதிராக கடும் பொருளாதார நடவடிக்கை; ட்ரம்ப் எச்சரிக்கை!

August 20, 2026
இலங்கையில் பயணிகள் ட்ரோன் சேவை; செப்டெம்பரில் முன்னோடித் திட்டம்!
செய்திகள்

இலங்கையில் பயணிகள் ட்ரோன் சேவை; செப்டெம்பரில் முன்னோடித் திட்டம்!

August 20, 2026
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு இன்று ஆரம்பம்!
செய்திகள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு இன்று ஆரம்பம்!

August 20, 2026
காருடன் மோதிய முச்சக்கர வண்டி; சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு!
செய்திகள்

காருடன் மோதிய முச்சக்கர வண்டி; சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு!

August 20, 2026
டெங்கு கட்டுப்பாட்டு பணிகளில் இருந்து விலகும் இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்!
செய்திகள்

டெங்கு கட்டுப்பாட்டு பணிகளில் இருந்து விலகும் இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்!

August 20, 2026
Next Post
கிளிநொச்சி பகுதியில் தனியாக வசித்து வந்த பெண்ணின் வீட்டின் மீது தாக்குதல்!

கிளிநொச்சி பகுதியில் தனியாக வசித்து வந்த பெண்ணின் வீட்டின் மீது தாக்குதல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.