Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விவசாயிகளுக்கு இலவசமாக உரங்கள் வழங்க தீர்மானம்; அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவிப்பு!

விவசாயிகளுக்கு இலவசமாக உரங்கள் வழங்க தீர்மானம்; அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவிப்பு!

12 months ago
in செய்திகள்

நெற் பயிச்செய்கைக்குத் தேவையான MOP உரத்தை அடுத்த இரண்டு பெரும் போகங்களுக்கு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அதிபர் ஊடக மையத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், விவசாயம் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு, இளைஞர் சமூகத்தை விவசாயத்துறைக்கு ஈர்க்கும் வகையில் பல வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளது.

அது தொடர்பில் நாட்டின் 25 மாவட்டங்களை உள்ளடக்கிய 160 கிராமங்களை தெரிவு செய்து இளைஞர் விவசாய தொழில்முனைவோர் கிராமத் திட்டங்களை ஆரம்பிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

அடுத்த 05 போகங்களில் இந்நாட்டில் நெற்பயிர்ச் செய்கையை இரட்டிப்பாக்குவதே எமது இலக்காகும். இந்த இலக்கை அடைய, நெல் விளைச்சளுக்கான தொழில்நுட்ப பெகேஜ் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளோம்.

நெற் பயிர்ச்செய்கையின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் வகையில், பல்வேறு பிரதேசங்களில் ஒரு இலட்சம் ஹெக்டெயர்களை தேர்ந்தெடுத்து நெல் விளைச்சலை அதிகரிக்க சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தவுள்ளோம்.

கடந்த சில ஆண்டுகளாக காலநிலைப் பாதிப்பு காரணமாக பயிர் சேதமும் அதிகரித்துள்ளது. மேலும் சந்தையில் உரங்களின் விலை உயர்வால் நெல் உள்ளிட்ட ஏனைய பயிர் செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்திடம் இருந்து MOP உரத்தைப் பெற கோரிக்கை விடுத்துள்ளோம். அதன்படி, 55,000 மெற்றிக் டொன் MOP உரத்தை வழங்குவதற்கு அந்த அமைப்பு இணங்கியுள்ளது.

அடுத்த இரண்டு போகங்களில் நெல் விவசாயிகளுக்கு இலவசமாக MOP உரம் வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. மேலும், தேயிலை பயிர்ச்செய்கைக்கான உரங்களை மானிய அடிப்படையில் வழங்க ஏற்பாடு செய்துள்ளோம்.

அதன்படி, அரசாங்கத்துக்குச் சொந்தமான உர நிறுவனங்கள் தேயிலை பயிர்ச்செய்கைக்கு அவசியமான உரத்தை உற்பத்தி செய்வதுடன், சந்தை விலையை விட 50% குறைவாக அந்த உரங்களை வழங்குகின்றன. இந்த உர மானியத்திற்காக செலவிடப்படும் தொகை 12 பில்லியன் ரூபாவாகும்” என்று மேலும் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

ஜனாதிபதி பொது மன்னிப்பு என்ற போர்வையில் 68 கைதிகள் சட்டவிரோதமாக விடுவிப்பு
செய்திகள்

ஜனாதிபதி பொது மன்னிப்பு என்ற போர்வையில் 68 கைதிகள் சட்டவிரோதமாக விடுவிப்பு

June 11, 2025
தமிழகம் காரைக்கால் ரயில் நிலையத்தில் இலங்கை இளைஞன் கைது
உலக செய்திகள்

தமிழகம் காரைக்கால் ரயில் நிலையத்தில் இலங்கை இளைஞன் கைது

June 11, 2025
இறந்து 8 நிமிடங்களில் மீண்டும் உயிர் பெற்ற ஆச்சரியம்; பெண் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள்
உலக செய்திகள்

இறந்து 8 நிமிடங்களில் மீண்டும் உயிர் பெற்ற ஆச்சரியம்; பெண் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள்

June 11, 2025
அமெரிக்க பொது நூலக வாகன நிறுத்தத்தில் தீ விபத்து
உலக செய்திகள்

அமெரிக்க பொது நூலக வாகன நிறுத்தத்தில் தீ விபத்து

June 11, 2025
9 ஐ.எஸ் தீவிரவாதிகளை தூக்கிலிட்ட ஈரான்
உலக செய்திகள்

9 ஐ.எஸ் தீவிரவாதிகளை தூக்கிலிட்ட ஈரான்

June 11, 2025
10 இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண்; 11 ஆவது மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி
செய்திகள்

10 இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண்; 11 ஆவது மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

June 11, 2025
Next Post
யாழில் பால் புரைக்கேறி சிசு உயிரிழப்பு!

யாழில் பால் புரைக்கேறி சிசு உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.