Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சத்துருக்கொண்டான் படுகொலை தூபி கல்வெட்டை கொண்டு சென்ற பொலிஸார்; இராணுவத்தினரும் விசாரணை!

சத்துருக்கொண்டான் படுகொலை தூபி கல்வெட்டை கொண்டு சென்ற பொலிஸார்; இராணுவத்தினரும் விசாரணை!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

புதிய இணைப்பு

சற்று முன் சத்துருக்கொண்டான் நினைவு தூபியில் அஞ்சலி நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த ஏற்பாட்டாளர்களுள் ஒருவரான சமூக செயற்பாட்டாளர் லவக்குமார் மற்றும் பெண் ஒருவர் உட்பட 5 பேரை பொலிஸார் கைது செய்து வாகனத்தில் ஏற்றி செல்ல முட்பட்டிருந்தனர்.

பின்னர் குறித்த 5 பேரையும் கொண்டு செல்லாது, எச்சரிக்கப்பட்டு அவ்விடத்திலேயே விடுவித்திருத்ததுடன், இராணுவத்தினரின் பெயரையும், முஸ்லீம் ஊர்காவல் படையினரின் பெயரையும் பொரித்த கல்வெட்டை பொலிஸார் எடுத்து சென்றுள்ளனர்.

இராணுவத்தினர், முஸ்லீம் ஊர்காவல் படையினர் என்னும் பெயரை பயன் படுத்த முடியாது என்றும், வேண்டும் என்றால் பொதுவாக படையினர் என்று மாத்திரம் குறிப்பிடலாம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம் தற்போது அந்த பகுதியில் இராணுவத்தினர் வருகை தந்துள்ளதாகவும், விசேட விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாவும் எமது செய்தியாளர் சம்பவ இடத்திலிருந்து தகவல் வழங்கினார்.

முதல் இணைப்பு

மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் பகுதியில் 1990.09.09 அன்று பனிச்சையடி, கொக்குவில், சாத்திருகொண்டான், பிள்ளையாரடி போன்ற பிரதேசங்களில் 186 பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டதன் 34 வது நினைவஞ்சலி தினம் இன்று 09 அனுஷ்டிக்கப்படுகிறது.

இதன் ஒரு அங்கமாக உறவுகளினாலும், சந்திரகொண்டான் நினைவுதூபி அஞ்சலி ஏற்பாட்டுக் குழுவினர்களாலும் இன்றையதினம், உயிரிழந்தவர்களின் பெயர் மற்றும் யாரால் கொல்லப்பட்டனர் போன்ற விபரங்களை கல் வடிவமாக தூபியில் பதிக்கும் வேலை ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் அங்கு வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், தூபியை அவதானித்த பிறகு ‘ நீங்கள் இலங்கை இராணுவம் மற்றும் முஸ்லீம் ஊர்காவல் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர் என்று எழுதியுள்ளீர்கள். இது சட்டத்திற்கு முரணான செயல் அது மட்டுமல்லாது இங்கு எந்த கொலையும் இடம்பெறவில்லை” எனவும் அங்கு பணி புரிந்த வேலையாட்கள் , ஏற்பாட்டு குழுவினர் என்போரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பில் இதற்கு பொதுமக்கள் விளக்கமளித்த வேளை, இது தொடர்பில் மேலிடத்திற்கு அறிவிக்கப்பபோவதாக தெரிவித்த இரண்டு பொலிஸாரும், குறித்த தூபியை புகைப்படம் எடுத்து சென்றுள்ளதுடன், தற்போது அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டு ஒரு அசாதாரண சூழல் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Tags: BatticaloaBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!

September 12, 2026
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது!
செய்திகள்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது!

September 12, 2026
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; ஹோர்முஸ் பேச்சுவார்த்தை காரணமா?
செய்திகள்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; ஹோர்முஸ் பேச்சுவார்த்தை காரணமா?

September 12, 2026
“எந்த அரசியல் கட்சியாலும் அரசை வீழ்த்த முடியாது”; பிமல் ரத்நாயக்க
செய்திகள்

“எந்த அரசியல் கட்சியாலும் அரசை வீழ்த்த முடியாது”; பிமல் ரத்நாயக்க

September 12, 2026
Next Post
தலதா மாளிகைக்குள் புகைப்படம் எடுத்த புதுமண தம்பதியினருக்கு சிக்கல்!

தலதா மாளிகைக்குள் புகைப்படம் எடுத்த புதுமண தம்பதியினருக்கு சிக்கல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.