Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மென்பானக்களின் சுவையூட்டினால் கல்லீரல் புற்று நோய்; சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி முகவரகம் எச்சரிக்கை!

மென்பானக்களின் சுவையூட்டினால் கல்லீரல் புற்று நோய்; சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி முகவரகம் எச்சரிக்கை!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மென்பானங்கள் மற்றும் உணவு வகைகளில் சேர்க்கப்படுகின்ற இனிப்புச் சுவையூட்டிகள்
மனிதர்களில் புற்றுநோயைக் குறிப்பாக கல்லீரல் புற்று நோயை-உண்டாக்கலாம்.உலக சுகாதார நிறுவனத்துடன் சேர்ந்து இயங்குகின்ற சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி முகவரகம் இவ்வாறு எச்சரிக்கை
செய்துள்ளது.உலகில் சீனிச் சுவைக்குப் பிரதியீடாகப் பரந்த அளவில் உபயோகிக்கப்பட்டு வருகின்ற
இனிப்புச் சுவையூட்டிக்கும்புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பு பற்றி உலக அமைப்பு
வெளியிடுகின்ற முதல் பகிரங்க மதிப்பாய்வு இதுவாகும்.

உலகெங்கும் மேற்கொள்ளப்பட்ட ஆயிரத்து 300 ஆய்வுகளது அறிக்கைகளின் அடிப்படையிலேயே செயற்கை இனிப்புச் சுவையூட்டி “மனிதர்களில் புற்றுநோயை உண்டாக்கலாம்” என்ற முடிவை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இனிப்புச் சுவையூட்டிகள் புற்றுநோயை உருவாக்கலாம் என்ற முடிவு நீண்டகாலத்துக்கு
முன்னரே பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்த போதிலும் அதனை உறுதிப்படுத்தி அறிவிப்பதை உலக சுகாதார நிறுவனம் தாமதப்படுத்தி வந்தது. இனிப்புச் சுவையூட்டியை சரியான அளவில் உள்ளெடுப்பது ஆபத்தை ஏற்படுத்தாது என்று அமெரிக்கா உட்பட மற்றும்
சில நாடுகளது உணவு மருந்துக் கட்டுப்பாட்டு அதிகார அமைப்புகள் வாதாடி வந்தமையே
அதற்குக் காரணமாகும்.

உலகப் புகழ்பெற்ற “கோலா” மென்பானம் உட்பட ஏராளமான பானங்கள், உணவுகள், பற்பசை போன்றவற்றில் இனிப் புச்சுவைக்குப் பதிலாக இந்த செயற்கை முறை இனிப்பு எனப்படும்
செயற்கைச் சுவையூட்டி கலக்கப்படுகின்றது. கடந்த பல தசாப்தங்களாக நீரிழிவு, உடற்பருமன் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட பலரும் செயற்கை இனிப்புச் சுவையூட்டிய மென் பானங்களையும் உணவுவகைகளையும் மிகப் பரந்துபட்ட அளவில் உள்ளெடுத்து வருகின்றனர்.

1964 இல் அறிவியலாளர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்ட வெண் நிறத் தூள் போன்ற இந் தச் செயற்கை இனிப்பு சாதா ரண சீனி மற்றும் சர்க்கரையை விடவும் இருநூறு மடங்கு இனிப்புச் சுவை கொண்டது.
அமெரிக்கா 1974 இல் அதனை உணவுப் பொருள்களில் பாவிப்பதற்கு அனுமதித்தது. அதே
செயற்கை இனிப்பை நுகர்வுக்கு அனுமதிப்பதற்கு பிரான்ஸ் 1994 வரை காத்திருந்தது.

தொடர்புடையசெய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
Next Post
குறுந்தூர் மலை ஆதிசிவன் பொங்கல் பானையை காலால் மிதித்து பொலிஸ் அட்டகாசம்; இலங்கை சைவ மகாசபை கண்டனம்!

குறுந்தூர் மலை ஆதிசிவன் பொங்கல் பானையை காலால் மிதித்து பொலிஸ் அட்டகாசம்; இலங்கை சைவ மகாசபை கண்டனம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.