Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு யோசனையை எந்தவொரு நீதிமன்றத்திலும் சவாலுக்கு உட்படுத்த முடியாது – சபாநாயகர்

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு யோசனையை எந்தவொரு நீதிமன்றத்திலும் சவாலுக்கு உட்படுத்த முடியாது – சபாநாயகர்

2 years ago
in செய்திகள்

உள்நாட்டு கடன்களை மறுசீரமைப்பதற்காக செயற்படுத்தப்படும் யோசனையை எந்தவொரு நீதிமன்றத்திலும் சவாலுக்கு உட்படுத்த முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்திற்கு இன்று தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற நடைமுறையைப் பின்பற்றி நிறைவேற்றப்பட்ட யோசனைக்கு எதிராக, எந்தவொரு வகையிலும் உத்தரவு அல்லது தீர்ப்பை வழங்குவதற்கு இலங்கை அரசியலமைப்பின் கீழ் நிறுவப்பட்டுள்ள எந்தவொரு நீதிமன்றத்திற்கும் அதிகாரம் இல்லை என சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறான எந்தவொரு உத்தரவு அல்லது நீதிமன்ற தீர்ப்பும் அரசியலமைப்பு மீறலாக அமையும் என சபாநாயகர் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பின் 148 ஆவது பிரிவிற்கு அமைய, அரச நிதி தொடர்பான முழுமையான கட்டுப்பாடு பாராளுமன்றத்தின் வசம் காணப்படுவதாக சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டமானது அமைச்சரவையினால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டு, பாராளுமன்ற அரச நிதி தொடர்பான செயற்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர், 2023 ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி பாராளுமன்றத்தில் மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் நினைவுபடுத்தினார்.

அதற்கமைய, குறித்த யோசனையானது உயர் நீதிமன்றத்தில் அல்லது 1978 ஆம் ஆண்டின் இலங்கை அரசியலமைப்பின் கீழ் நிறுவப்பட்ட வேறு எந்தவொரு நீதிமன்றத்திலும் விசாரணைக்குட்படுத்த, மறுபரிசீலனை செய்ய அல்லது சவாலுக்கு உட்படுத்தப்பட முடியாது என்பது சபாநாயகரின் நிலைப்பாடாகும்.

பாராளுமன்ற செயற்பாடுகளை கேள்விக்குட்படுத்த அல்லது தலையீடு செய்ய நீதிமன்றத்திற்கு முடியாது என முன்னாள் சபாநாயகர் அனுர பண்டாரநாயக்க மிகத் தௌிவாக அறிவித்துள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.

தொடர்புடையசெய்திகள்

பிள்ளையானிடம் சிக்கிய சட்லைட் தொலைபேசி; அசாத் மௌலானா தொடர்பில் அதிரடி முடிவு
செய்திகள்

பிள்ளையானிடம் சிக்கிய சட்லைட் தொலைபேசி; அசாத் மௌலானா தொடர்பில் அதிரடி முடிவு

June 8, 2025
மாத்திரைகளை அளவுக்கதிகமாக உட்கொண்ட முதியவர் உயிரிழப்பு
செய்திகள்

மாத்திரைகளை அளவுக்கதிகமாக உட்கொண்ட முதியவர் உயிரிழப்பு

June 8, 2025
அறுவை சிகிச்சை இல்லாமல் இரத்த நாளங்களிலிருந்து கொழுப்பை அகற்ற அறிமுகமான இயந்திரம்
செய்திகள்

அறுவை சிகிச்சை இல்லாமல் இரத்த நாளங்களிலிருந்து கொழுப்பை அகற்ற அறிமுகமான இயந்திரம்

June 8, 2025
இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது
செய்திகள்

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது

June 8, 2025
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாற்றுவதற்கு முயற்சி; சம்பிக்க குற்றச்சாட்டு
செய்திகள்

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாற்றுவதற்கு முயற்சி; சம்பிக்க குற்றச்சாட்டு

June 8, 2025
ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் விடுவிப்பு; சி.ஐ.டியினர் விசாரணை
செய்திகள்

ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் விடுவிப்பு; சி.ஐ.டியினர் விசாரணை

June 8, 2025
Next Post
சம்பியன் கிண்ணத்தை வென்றது பிளைங் ஹோர்ஸ் அணி!

சம்பியன் கிண்ணத்தை வென்றது பிளைங் ஹோர்ஸ் அணி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.