கோறளைப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட பேத்தாழை கலைமகள் முன்பள்ளியின் சிறுவர் விளையாட்டு விழா நேற்று (04) விமர்சையாக நடைபெற்றது.
விழா தொடக்கத்தில், அதிதிகள் மலர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன், மாணவர்கள் பாண்டு வாத்திய இசையுடன் அவர்களை அழைத்து வரவேற்றனர். தேசிய கொடி ஏற்றப்பட்டதையும், அதன் பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டதையும் அடுத்து, மங்கள விளக்கேற்றல் நிகழ்வுடன் விழா ஆரம்பமாகியது.
விழாவில் மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சி, தனிப்பட்ட மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றன. இதில் மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.






வெற்றி பெற்ற மாணவர்கள் வெற்றிப் பதக்கங்கள் மற்றும் பரிசுகளைப் பெற்றுத் தங்கள் சாதனைகளுக்குப் பாராட்டு பெற்றனர்.
விழாவில் கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் சு. சுதாகரன் பிரதம அதிதியாக, பிரதேச சபை உறுப்பினர்கள் வெ. பிறைசூடி மற்றும் ந. நிமல்ராஜ் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர். மேலும், பாடசாலை அதிபர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளும் விழாவில் கலந்துகொண்டனர்.








