இன்று (23) அதிகாலை ஓட்டமாவடி-கொழும்பு பிரதான வீதியின் சூடுபத்தினசேனை சந்தி பகுதியில் டிப்பரும் காரும் மோதியதில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து மட்டக்களப்பின் கொக்கட்டிச்சோலை நோக்கி பயணித்த கார், வாழைச்சேனையிலிருந்து புணானை நோக்கி வந்த டிப்பருடன் மோதியதே இவ்விபத்திற்குக் காரணமாகும்.
விபத்தில் கார் பயணிகளுள் மூவர் காயமடைந்த நிலையில் உடனடியாக வாழைச்சேனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும், குறித்த கார் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.













