Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பீர் அருந்துவோர் நுளம்புகளை அதிகம் ஈர்ப்பதாக ஆய்வில் தகவல்

பீர் அருந்துவோர் நுளம்புகளை அதிகம் ஈர்ப்பதாக ஆய்வில் தகவல்

9 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

நெதர்லாந்தில் நடைபெற்ற இசை திருவிழாவில், கொசுக்கள் (நுளம்புகள்) ஏன் சிலரை மட்டுமே குறிவைத்து கடிக்கின்றன என்பதைக் கண்டறியும் நோக்கில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இதில் 500 பேர் பங்கேற்றனர், மேலும் ஆய்வுக்காக ஆயிரக்கணக்கான கொசுக்கள் பயன்படுத்தப்பட்டன. பங்கேற்பாளர்களிடம் உணவு, சுகாதாரம் மற்றும் நடத்தை பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டன. பின்னர் அவர்கள் கைகளை கொசுக்கள் அடங்கிய சிறப்பு பெட்டியில் வைக்க அறிவுறுத்தப்பட்டனர். அந்த பெட்டியில் உள்ள சிறிய துளைகள் மூலம் கொசுக்கள் மனித வாசனையை உணர்ந்தன, ஆனால் கடிக்க முடியவில்லை.

இந்த ஆய்வில் கிடைத்த தகவல்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தின. பீர் குடித்தவர்கள் கொசுக்களை 1.35 மடங்கு அதிகமாக ஈர்த்தனர் என்பதைக் கண்டுபிடித்தனர். மது அருந்திய பிறகு உடலில் ஏற்படும் வாசனை மாற்றங்களும், வியர்வை அதிகரிப்பும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது என்று விஞ்ஞானிகள் விளக்கினர். அதோடு, முந்தைய இரவு ஒருவருடன் படுக்கையை பகிர்ந்தவர்கள், குறைவாக குளித்தவர்கள் அல்லது சன்ஸ்கிரீன் பயன்படுத்தாதவர்களும் கொசுக்களை அதிகம் ஈர்த்தனர்.

ஆய்வின் தலைமை விஞ்ஞானி பெலிக்ஸ் ஹோல், கொசுக்கள் நேரடியாக மதுவால் ஈர்க்கப்படவில்லை என்று கூறினார். ஆனால் பீர் அருந்திய பிறகு உடலில் உருவாகும் வியர்வை வாசனை மற்றும் உடல் செயல்பாடுகள் மாற்றம் கொசுக்களை கவர்ந்ததாக விளக்கினார். மேலும், கொசுக்கள் 100 மீட்டர் தொலைவிலிருந்தே மனித வாசனையை உணரக்கூடியவை என்பதும் தெரியவந்தது. இதனால், ஒருவர் தொலைவில் இருந்தாலும், பீர் குடித்தால் கொசுக்கள் அவரை எளிதில் கண்டுபிடிக்கும் என்று தெரியவந்தது.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் பெரும்பாலும் இளம் வயதினர் மற்றும் ஆரோக்கியமானவர்கள் என்பதால், முடிவுகள் அனைத்து மக்களுக்கும் பொருந்துமா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. பல்வேறு வயது மற்றும் சுகாதார நிலைமையிலுள்ள மக்களுடன் மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். மொத்தத்தில், பீர் அருந்திய பிறகு கொசுக்களால் அதிகம் குறிவைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈரான் மீதான நடவடிக்கை இன்னும் முடியவில்லை; இஸ்ரேல் பிரதமர்!
உலக செய்திகள்

ஈரான் மீதான நடவடிக்கை இன்னும் முடியவில்லை; இஸ்ரேல் பிரதமர்!

June 23, 2026
புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது
செய்திகள்

புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

June 23, 2026
நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை மூட உத்தரவு!
செய்திகள்

நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை மூட உத்தரவு!

June 23, 2026
அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு!
செய்திகள்

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு!

June 23, 2026
கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓய்வுபெற்ற அதிபர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓய்வுபெற்ற அதிபர் உயிரிழப்பு

June 23, 2026
வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!
செய்திகள்

வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!

June 23, 2026
Next Post
சீகிரியாவில் கண்ணாடி சுவரை சேதப்படுத்திய 21 வயது யுவதி கைது

சீகிரியாவில் கண்ணாடி சுவரை சேதப்படுத்திய 21 வயது யுவதி கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.