Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ட்ரம்ப் முன்னிலையில் நடந்த அமைதி ஒப்பந்தத்தை நிறுத்தியது தாய்லாந்து

ட்ரம்ப் முன்னிலையில் நடந்த அமைதி ஒப்பந்தத்தை நிறுத்தியது தாய்லாந்து

7 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

கம்போடியாவுடன் போர் நிறுத்தம் செய்ய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முன்னிலையில், கையெழுத்தான ஒப்பந்தத்தை தாய்லாந்து நிறுத்தி வைத்துள்ளது.

எல்லைப் பிரச்சினை காரணமாக தாய்லாந்து – கம்போடியா இடையே நீண்ட நாட்களாக மோதல் நீடித்து வருகிறது. கடந்த ஜூலையில் ஏற்பட்ட மோதலில் இரு தரப்பிலும் 30 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

இதனிடையே, ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து இரு நாடுகளும் முதல்நிலை போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன.

மலேசியாவில் இடம்பெற்ற ஆசியான் மாநாட்டில் அவர் முன்னிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இரு நாட்டு பிரதமர்களும் கையெழுத்திட்டனர். இந்நிலையில் இரு நாட்டு எல்லையில் சிசாகெட் மாகாணத்தில் புதிதாக வைக்கப்பட்ட கண்ணி வெடி வெடித்ததில், பணியில் ஈடுபட்ட தாய்லாந்து இராணுவ வீரர்கள் இரண்டு பேர் காயம் அடைந்துள்ளனர்.

இதன் பின்னணியில் கம்போடியா இருக்கும் என்ற சந்தேகம் தாய்லாந்துக்கு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து மலேசியாவில், ட்ரம்ப் முன்னிலையில் கையெழுத்தான போர் நிறுத்த ஒப்பந்ததத்தை நிறுத்தி வைப்பதாக தாய்லாந்து பிரதமர் அறிவித்துள்ளார்.

இது குறித்து தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் கூறியதாவது? தெளிவான முடிவு ஏற்படும் வரை அமைதிக்காக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கிறோம்.

நாங்கள் எதிர்பார்த்தபடி விரோதம் குறையவில்லை என்பது தற்போது நடந்த நிகழ்வுகள் காட்டுகிறது. எனவே இனியும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

“செம்மணி தமிழ் இனப்படுகொலைக்கான சாட்சி”; சிறிநாத்
காணொளிகள்

“செம்மணி தமிழ் இனப்படுகொலைக்கான சாட்சி”; சிறிநாத்

June 24, 2026
சுரேஷ் சலே விவகாரம்; பாப்பரசருக்கு கடிதம் அனுப்பிய தாயார்!
செய்திகள்

சுரேஷ் சலே விவகாரம்; பாப்பரசருக்கு கடிதம் அனுப்பிய தாயார்!

June 24, 2026
ராஜபக்ச குடும்பத்தினர் திட்டமிட்டு பழிவாங்கப்படுகின்றனர்; மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்டு!
செய்திகள்

ராஜபக்ச குடும்பத்தினர் திட்டமிட்டு பழிவாங்கப்படுகின்றனர்; மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்டு!

June 24, 2026
தூக்கி அடிக்குறதா?..தூக்காம அடிக்குறதா?;கிளிநொச்சியே மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டம்-அர்ச்சுனா
அரசியல்

தூக்கி அடிக்குறதா?..தூக்காம அடிக்குறதா?;கிளிநொச்சியே மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டம்-அர்ச்சுனா

June 24, 2026
352 மில்லியன் ரூபா பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருளுடன் கனேடிய யுவதி கைது!
செய்திகள்

352 மில்லியன் ரூபா பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருளுடன் கனேடிய யுவதி கைது!

June 24, 2026
6 உலகக் கிண்ண தொடர்களில் கோல் அடித்து ரொனால்டோ வரலாற்று சாதனை!
செய்திகள்

6 உலகக் கிண்ண தொடர்களில் கோல் அடித்து ரொனால்டோ வரலாற்று சாதனை!

June 24, 2026
Next Post
உலக மேசைப்பந்து தரவரிசையில் 3வது இடம் பிடித்த 11 வயதுக்குட்பட்ட இலங்கை வீரர் டாவி சமரவீர

உலக மேசைப்பந்து தரவரிசையில் 3வது இடம் பிடித்த 11 வயதுக்குட்பட்ட இலங்கை வீரர் டாவி சமரவீர

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.