Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாடப்புத்தகத்தையே சரியாக அச்சிடாத அரசு எவ்வாறு புதிய அரசியலமைப்பை உருவாக்கும்; நாமல் கேள்வி

பாடப்புத்தகத்தையே சரியாக அச்சிடாத அரசு எவ்வாறு புதிய அரசியலமைப்பை உருவாக்கும்; நாமல் கேள்வி

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பாடப்புத்தகத்தை கூட ஒழுங்காக அச்சிடாத அரசாங்கம் எவ்வாறு புதிய அரசியலமைப்பை உருவாக்கும்.அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்கினால் அது ஒற்றையாட்சிக்கு முழுமையாக எதிரானதாகவும் நாட்டை பிரிக்கும் வகையில் தான் அமையும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும்,பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசாங்கத்துக்கு எதிராகவோ அல்லது அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கவோ நாங்கள் செயற்பட போவதில்லை. ஏனெனில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அரசாங்கத்துக்கே எதிராக அமையும். எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் தவறை சுட்டிக்காட்டும் போது அதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலை அரசாங்கத்துக்கு இல்லை.

புதிய கல்வி கொள்கை அரசாங்கத்துக்கு எதிரானதாகவே திரும்பியுள்ளது. இலங்கைக்கு பொருத்தமான வகையில் புதிய கல்வி கொள்கையை அமுல்படுத்த வேண்டுமே தவிர மேற்குலக நாடுகளுக்கு பொருத்தமான வகையில் அல்ல என்பதை அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்ட சர்ச்சைக்குரிய விடயத்தை புத்தகத்தில் இருந்து நீக்குவதாக கல்வி அமைச்சர் குறிப்பிடுகிறார்.இது அரச நிதி முறைக்கேடு இல்லையா, இந்த செயற்பாட்டுக்காக நாங்கள் நிச்சயம் வழக்குத் தாக்கல் செய்வோம்.

ஆட்சிக்கு வந்தவுடன் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக அரசாங்கம் குறிப்பிட்டது. பாடப்புத்தகத்தை கூட முறையாக அச்சிடாத அரசாங்கம் எவ்வாறு புதிய அரசியலமைப்பை உருவாக்கும். இந்த அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்கினால் அது ஒற்றையாட்சிக்கு முழுமையாக எதிரானதாகவும் நாட்டை பிரிக்கும் வகையில் தான் அமையும்.

ஆகவே புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்று தேவையற்ற விடயங்களை முன்னெடுக்காமல் பதவி காலத்தை நிறைவு செய்து விட்டு வீடு செல்லுமாறு அரசாங்கத்திடம் குறிப்பிட்டுக்கொள்கிறோம் என்றார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈரான் மீதான நடவடிக்கை இன்னும் முடியவில்லை; இஸ்ரேல் பிரதமர்!
உலக செய்திகள்

ஈரான் மீதான நடவடிக்கை இன்னும் முடியவில்லை; இஸ்ரேல் பிரதமர்!

June 23, 2026
புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது
செய்திகள்

புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

June 23, 2026
நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை மூட உத்தரவு!
செய்திகள்

நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை மூட உத்தரவு!

June 23, 2026
அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு!
செய்திகள்

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு!

June 23, 2026
கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓய்வுபெற்ற அதிபர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓய்வுபெற்ற அதிபர் உயிரிழப்பு

June 23, 2026
வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!
செய்திகள்

வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!

June 23, 2026
Next Post
ஈரானுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுக்க விரும்பும் டிரம்ப்

ஈரானுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுக்க விரும்பும் டிரம்ப்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.