பெப்ரவரி மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 279,328 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இது கடந்த ஆண்டின் பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 16.2% அதிகரிப்பாகும்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் வெளியிடப்பட்ட அண்மைக்கால தரவுகளின்படி, பெப்ரவரி மாதத்தில் இந்தியாவிலிருந்து 47,679 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர், இது 17% ஆகும்.
மேலும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 30,788 பேரும், ரஷ்யாவிலிருந்து 23,099 பேரும், ஜெர்மனியிலிருந்து 22,566 பேரும், சீனாவிலிருந்து 20,180 பேரும் மற்றும் பிரான்ஸிலிருந்து 17,174 பேரும் பெப்ரவரி மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அதற்கமைய, 2026 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி முதல் பெப்ரவரி 28 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 556,655 ஆகும்.
அவர்களுள் 99,740 பேர் இந்தியாவிலிருந்தும், 50,233 பேர் ரஷ்யாவிலிருந்தும் மற்றும் 60,328 பேர் ஐக்கிய இராச்சியத்திலிருந்தும் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா வளர்ச்சி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.








