இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு; ஈரான் மற்றும் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான தாக்குதல்கள் தொடரும்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரான் மீது தொடர்ந்து வலுவான தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பை இன்னும் தீவிரமான சக்தியுடன் எதிர்கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் மத்திய பகுதியில் உள்ள விமானப்படை தளத்தில் உரையாற்றிய அவர்,
இஸ்ரேலிய போர் விமானங்கள் ஈரான், தெஹ்ரான் மற்றும் லெபனான் வான்பரப்பில் தொடர்ந்து பறந்து தாக்குதல் நடத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.
“எங்கள் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் ஹிஸ்புல்லா மிகப்பெரிய தவறு செய்துவிட்டது.
ஏற்கனவே நாங்கள் கடுமையாகப் பதிலடி கொடுத்துள்ளோம், இனி வரும் நாட்களில் இன்னும் பலமடங்கு வீரியத்துடன் பதிலடி கொடுப்போம்” என அவர் எச்சரித்துள்ளார்.








