சுவிட்சர்லாந்தின் பர்கன்ஸ்டாக் நகரில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போதே, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் தளத்தில் ஓர் குறித்த எச்சரிக்கையைப் பதிவிட்டார்.
“லெபனானில் அதிக ஊதியம் பெறும் தங்களின் கைக்கூலிகள் (Hezbollah proxies) மூலம் பிரச்சனை செய்வதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால், கடந்த வாரம் செய்தது போலவே, இன்னும் கடுமையாக ஈரானை மீண்டும் தாக்குவோம்!!!” என்பதே அவரின் பதிவாகும்.
ட்ரம்பின் இந்த கடுமையான அச்சுறுத்தலைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த ஈரானிய தூதுக்குழு தங்களது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துவிட்டு அரங்கிலிருந்து வெளியேறியது. இதனால் தற்போதைய சமாதானப் பேச்சுவார்த்தை பெரும் இழுபறி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
கடந்த வாரம் இரு நாடுகளுக்கும் இடையே தற்காலிகப் போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது. எனினும், லெபனான் எல்லையில் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினரிடையே தொடர்ந்து வரும் மோதல்களால் இந்த அமைதி ஒப்பந்தம் முறியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பை ஈரான் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், இல்லையெனில் ஹோமுஸ் நீரிணையை (Strait of Hormuz) அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு பொருளாதாரத் தடைகளைத் தீவிரப்படுத்தும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.








