மட்டக்களப்பு – ஏறாவூர் எல்லை நகர் வட்டாரத்தில் சுமார் ஒரு கோடி ரூபா நிதியில் சகல வசதிகளையும் கொண்ட சிறுவர் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது.
ஏறாவூர் நகர சபையின் உறுப்பினர் சுப்ரமணியம் ரகுபரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சபையின் தவிசாளர் எம்எஸ். நழிம் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டார்.
இத்திட்டத்திற்கென கிழக்கு மாகாண சபையினால் முதற்கட்டமாக முப்பது இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிதியின் மூலமாக சிறுவர் புங்காவிற்கான முதற்கட்டப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் அடுத்த கட்டமாக மின்சாரம் , தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அடிக்கல் நாட்டும் நிகழ்வில் சமய, சமூக மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.










