அமெரிக்க விமானப்படை, ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் சேமிப்பு கிடங்குகள், கடலோர ரேடார் தளங்கள் உள்ளிட்ட பல இராணுவ இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் மீறியதன் காரணமாகவே இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு எதிராக ஈரான் தொடர்ந்து பதிலடி நடவடிக்கைகளை மேற்கொண்டால், “ஈரானே இருக்காது” என டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த தாக்குதலையடுத்து மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளதுடன், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சர்வதேச நாடுகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.









