Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம்!

2 years ago
in செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தி,நேற்று (10) முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரதான வாயிலை முற்றுகையிட்டு முல்லைத்தீவு மீனவர்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய் பகுதியில் பருவகால மீன்பிடிக்காக வருகைதந்துள்ள தென்னிலங்கை மீனவர்களாலும், ஏனைய சிலராலும் சுருக்குவலை, வெளிச்சம்பாய்சி மீன்பிடித்தல், வெடிவைத்து மீன்பிடித்தல் உள்ளிட்ட பல சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் மேறகொள்ளப்பட்டு வருவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இவ்வாறான சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளின் மூலம் கடல்வளங்கள் அழிக்கப்படுவதால், தமது தெழில் நிலைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவுமாவட்ட கடற்றொழிலாளர்கள் இதன்போது கவலை தெரிவித்தனர்.

எனவே இவ்வாறான சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை உடனடியாக கட்டுப்படுத்தித் தருமாறு முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் உமா மகேஸ்வரனிடம் மீனவர்களால் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில், எதிர்வரும் (13)ஆம் திகதி இடம்பெறவுள்ள முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் ஆராய்வதுடன், இந்த விடயம் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர், கடற்படை அதிகாரிகள், மீனவர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல் ஒன்றினை ஒழுங்குசெய்து குறித்த பிரச்சினைக்கு தீர்வுகாண தம்மால் நடவடிக்கை எடுக்கப்படுமென இதன்போது முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் உமாமகேஸ்வரனால் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

மேலும் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெறும்போது கலகமடக்கும் பொலிசார், பொலிஸ் வாகனங்களில் ஏற்றப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததையும் அவதானிக்கமுடிந்தது.

தொடர்புடையசெய்திகள்

ஈரான் மீதான நடவடிக்கை இன்னும் முடியவில்லை; இஸ்ரேல் பிரதமர்!
உலக செய்திகள்

ஈரான் மீதான நடவடிக்கை இன்னும் முடியவில்லை; இஸ்ரேல் பிரதமர்!

June 23, 2026
புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது
செய்திகள்

புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

June 23, 2026
நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை மூட உத்தரவு!
செய்திகள்

நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை மூட உத்தரவு!

June 23, 2026
அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு!
செய்திகள்

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு!

June 23, 2026
கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓய்வுபெற்ற அதிபர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓய்வுபெற்ற அதிபர் உயிரிழப்பு

June 23, 2026
வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!
செய்திகள்

வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!

June 23, 2026
Next Post
கடலில் கண்டுபிடிக்கப்பட்ட வினோத உயிரினம்!

கடலில் கண்டுபிடிக்கப்பட்ட வினோத உயிரினம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.