Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சமூக ஊடகங்கள் குடிசை கைத்தொழில் போன்றது; டக்ளஸ் தேவானந்தா

சமூக ஊடகங்கள் குடிசை கைத்தொழில் போன்றது; டக்ளஸ் தேவானந்தா

5 months ago
in அரசியல், செய்திகள்

சமூக வலைத்தளங்கள் ஊடாக எனக்கு எதிராக பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டமையே எனது வீழ்ச்சிக்கு காரணம் என முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் (19) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த தேர்தலில் எமக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதனை சமாளிக்க அரசியலில் தற்காலிக ஓய்வு என்றும் கூறலாம்.

அமைச்சராக இருந்த போது, தலைக்கு மேலாக வேலை இருந்தது. தற்போது அது இல்லை. இதனால் கட்சிக்குள் உள்ள குறைப்பாடுகளை நீக்க, அது தொடர்பில் ஆராய்கிறோம். குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதுடன், கட்சியின் கொள்கை தொடர்பில் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

மிக விரைவில் கட்சியின் தேசிய மாநாட்டையும் நடாத்த உள்ளோம். டக்ளஸின் வீழ்ச்சிக்கும் , அநுரவின் எழுச்சிக்கும் சமூக வலைத்தளங்களே காரணம். சமூக வலைத்தளங்கள் ஊடாக எனக்கு எதிராக பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டனர். தற்போது சமூக ஊடகங்கள் குடிசை கைத்தொழில் போன்று பலருக்கும் வருமானம் ஈட்டிக்கொடுக்கிறது.

என்னுடைய பெயரை பயன்படுத்தி அவர்கள் வருமானம் பெற்றுக்கொள்வதால், அவர்களின் வருமானத்தை தடுக்க விரும்பாததால், அவர்களின் காணொளிகளை பெரிதுபடுத்தவில்லை.

முன்னைய காலங்களில் செய்திகளை பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், வானொலிகள் ஊடாகவே பார்க்க முடியும். தற்போது கையில் தொலைபேசியுடன், மலசல கூடம் முதல் படுக்கையறை வரையில் சென்று காணொளிகளை பார்க்க கூடிய நிலைமை இருப்பதால், அது இலகுவில் மக்கள் மத்தியில் சென்றடைகிறது. அவ்வாறான சமூக ஊடகங்கள் ஊடாகவே என் மீது அவதூறுகள் பரப்பப்பபட்டன.

குறிப்பாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் எனக்கு எதிராக அவதூறுகளை பரப்பினார். அவர் நாவற்குழி பகுதியில் உள்ள நீரேந்து பிரதேசத்தை நிரப்பி அங்கு ஒரு பெற்றோல் நிலையம் அமைக்க முனைந்தார். அதற்காக என்னிடம் உதவி கோரினார்.

அந்த இடத்தை நிருவினால் வெள்ள அனர்த்தம் ஏற்படும் என்பதுடன், அது பெற்றோல் நிலையம் அமைப்பதற்கு உகந்த இடமில்லை என்பதனால், அதற்கு நான் அனுமதி பெற்றுக்கொடுக்க உதவவில்லை.

அதேவேளை, கட்சியின் நிதி தேவைக்காக அவருடன் சில வர்த்தக உறவுகளையும் பேணி வந்தேன். ஆனால் அவர் நேர்மையற்றவராக முறைகேடுகளில் ஈடுபட்டமையால், அவருடனான வர்த்தக உறவை கைவிட்டேன். அதனாலேயே, அவர் என் மீது தேர்தல் காலத்தில் அவதூறுகளை பரப்பினார். அது கூட என் தோல்விக்கு காரணமாக அமைந்தது” என குறிப்பிட்டுள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

காணாமல் போயுள்ள பெண்ணை கண்டால் அறிவிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ள குடும்பத்தினர்
செய்திகள்

காணாமல் போயுள்ள பெண்ணை கண்டால் அறிவிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ள குடும்பத்தினர்

May 23, 2025
கையூட்டல் குற்றச்சாட்டில் போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரிகள் மூவருக்கு விளக்கமறியல்
செய்திகள்

கையூட்டல் குற்றச்சாட்டில் போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரிகள் மூவருக்கு விளக்கமறியல்

May 23, 2025
புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை
செய்திகள்

புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை

May 23, 2025
இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்களுக்கு 25 வீதம் வரி விதிக்கப்படும்; ட்ரம்ப் அறிவிப்பு
உலக செய்திகள்

இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்களுக்கு 25 வீதம் வரி விதிக்கப்படும்; ட்ரம்ப் அறிவிப்பு

May 23, 2025
கைது செய்யப்பட்ட அம்பிடியே சுமன ரத்ன தேரர் பிணையில் விடுதலை
செய்திகள்

கைது செய்யப்பட்ட அம்பிடியே சுமன ரத்ன தேரர் பிணையில் விடுதலை

May 23, 2025
அந்தமானில் ஏவுகணை சோதனை நடத்தப்படுவதனால் விமானங்கள் பறக்கத் தடை
செய்திகள்

அந்தமானில் ஏவுகணை சோதனை நடத்தப்படுவதனால் விமானங்கள் பறக்கத் தடை

May 23, 2025
Next Post
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.