Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இரவு கடமையிலிருக்கும் போக்குவரத்து பொலிஸாரின் அங்கியினால் விபத்து ஏற்படும் அபாயம்; இன்று முதல் புதிய நடைமுறை

இரவு கடமையிலிருக்கும் போக்குவரத்து பொலிஸாரின் அங்கியினால் விபத்து ஏற்படும் அபாயம்; இன்று முதல் புதிய நடைமுறை

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

போக்குவரத்து கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இரவு நேரங்களில் வாகனங்களை நிறுத்துவதற்காக சமிக்ஞை காட்டும் போது எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பாக பதில் பொலிஸ் மா அதிபரினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து கடமைகளில் இரவு நேரங்களில் வாகனங்களை நிறுத்துவதற்காக சமிக்ஞை காட்டும் போது பல சந்தர்ப்பங்களில் பல்வேறு வகையான மின்விளக்குகளைப் பயன்படுத்துவதனால் மின்விளக்குகளின் வெளிச்சம் வாகன ஓட்டுநர்களின் முகத்தில் படுவதால், சில சந்தர்ப்பங்களில் வாகனத்தை கையாள்வதிலும் கட்டுப்படுத்துவதிலும் சிரமங்கள் ஏற்படுவதுடன், விபத்துகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஒளி பிரதிபலிக்கும் ஜாக்கட்டுகள் அணியாதிருப்பதனால் அவர்களுக்கும் விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால், இன்று வியாழக்கிழமை (26) முதல் போக்குவரத்துக் கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைவாக செயற்படுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, வாகனங்களை நிறுத்துவதற்காக தற்போது பொலிஸ் நிலையங்களில் வழங்கப்பட்டுள்ள சிவப்பு மின் சமிக்ஞை விளக்குகளை பயன்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

மேலும், இரவு கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் இந் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார்களா, என்பதைத் தொடர்ந்தும் கண்காணிக்குமாறு தலைமையக பொலிஸ் பரிசோதகர்கள், பொறுப்பதிகாரிகள் மற்றும் போக்குவரத்து பொறுப்பதிகாரிகளுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 100 டொலரைக் கடந்தது!
செய்திகள்

மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 100 டொலரைக் கடந்தது!

July 23, 2026
உயிர்த்த ஞாயிறு வழக்கு; கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு ஓகஸ்ட் 3 வரை ஒத்திவைப்பு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு வழக்கு; கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு ஓகஸ்ட் 3 வரை ஒத்திவைப்பு!

July 23, 2026
வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!
செய்திகள்

வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!

July 23, 2026
சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்
செய்திகள்

சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்

July 23, 2026
அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்
உலக செய்திகள்

அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்

July 23, 2026
நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
உலக செய்திகள்

நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

July 23, 2026
Next Post
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரி இன்றி வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி இல்லை

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரி இன்றி வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி இல்லை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.