Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அஜர்பைஜான் ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரிய புடின்!; விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷ்யாவா?

அஜர்பைஜான் ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரிய புடின்!; விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷ்யாவா?

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

அஜர்பைஜான் எயார்லைன்ஸ் விமான விபத்திற்கு ரஷ்யாதான் பொறுப்பு என்று கூறாமல், அஜர்பைஜான் ஜனாதிபதியிடம், ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் மன்னிப்பு கோரியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகள் உக்ரேனிய ட்ரோன்களை விரட்டியபோது இந்த சோகமான சம்பவம் இடம்பெற்று விட்டதாகவும் புடின் தெரிவித்துள்ளார்.

அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவுடன் புடின் தொலைபேசியில் பேசிய போது குறித்த விடயங்களை கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

J2-8243 என்ற விமானம் டிசம்பர் 25 அன்று அஜர்பைஜான் தலைநகர் பாகுவிலிருந்து செச்சென் தலைநகர் க்ரோஸ்னிக்கு சென்று கொண்டிருந்தபோது, ​​தீ விபத்துக்குள்ளாகி, திசைதிருப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து விமானம், கஜகஸ்தானின் அக்டாவ் அருகே விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 67 பேரில் 38 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவுடன் புடின் தொலைபேசியில் பேசியதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.

அதில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ரஷ்ய வான்வெளியில் நடந்த சோகமான சம்பவம் குறித்து மன்னிப்பு கேட்டதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மீண்டும் தனது ஆழ்ந்த மற்றும் உண்மையான இரங்கலைத் தெரிவித்து, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புவதாக தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் வான்பாதுகாப்பு ஏவுகணைத் தாக்குதலில்தான் அஜா்பைஜான் எயார்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியதாக சந்தேகிக்கப்படும் நிலையில் புடினின் இந்த கருத்து தற்போது பேசுபொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்கதக்கது.

Tags: BattinaathamnewsSrilanka

தொடர்புடையசெய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்
செய்திகள்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்

September 8, 2026
பேத்தாழை விபுலானந்தா கல்லூரி பழைய மாணவர் விளையாட்டு நிகழ்வுகள் சிறப்பாக நிறைவு!
செய்திகள்

பேத்தாழை விபுலானந்தா கல்லூரி பழைய மாணவர் விளையாட்டு நிகழ்வுகள் சிறப்பாக நிறைவு!

September 8, 2026
Next Post
அமெரிக்காவில் டிக்டொக் செயலிக்கு தடை; உத்தரவை ஒத்தி வைக்குமாறு டிரம்ப் கோரிக்கை

அமெரிக்காவில் டிக்டொக் செயலிக்கு தடை; உத்தரவை ஒத்தி வைக்குமாறு டிரம்ப் கோரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.