முப்படைகளில் இருந்து தப்பியோடிய அதிகாரிகள் உட்பட 2,983 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெப்ரவரி 22 முதல் மே 30 வரை நடத்தப்பட்ட நடவடிக்கைகளில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட வீரர்களில் 2,261 பேர் இராணுவத்தினர், 194 பேர் கடற்படையினர் மற்றும் 198 பேர் விமானப்படையினர் ஆவர்.
மேலும், இலங்கை பொலிஸ் பிரிவில் 330 வீரர்கள் மற்றும் தப்பியோடிய அதிகாரிகளையும் கைது செய்ததாக பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.